Monday, August 10, 2009

பூ - பெண்


பெண்ணே இப்போதைக்கு
பூக்களுக்கும் எனக்கும்
ஒரேயொரு சந்தேகந்தான்
நீ தோட்டம் சுற்றிபார்க்கிறாயா
இல்லை யாரிந்த புதுபூவென
வண்டுகளோடு சேர்ந்து
தோட்டம் உன்னை சுற்றிபார்க்கிறதா !!


பூக்களின் விருப்பத்திற்கிணங்க
பூக்களை அழகுபடுத்த
பறித்து செல்கிறாயோ !!


பூச்செடி நடக்கிறதென
எல்லோரையும் குழப்புகிறாய்
தயவுசெய்து தோட்டம் பக்கம்
இனி போகவே போகாதே !!


பூக்களுக்கெதற்கு
அழகும் வாசமும்
தந்துகொண்டிருக்கிறாய்
தலையினில் சூடி !!


முகபருக்களை ஆராய்ந்தபின்பு
பூச்செடிகள் ஒன்றுகூடி
காற்றின் துள்ளலில் தலையசைத்து
பூந்தோட்டம் என்றவளை
வர்ணிப்பதாய் நீள்கிறது கனவு !!


பூக்களை பற்றிய
கவிதை கேட்கிறாள்
பூந்தோட்டமே நீயென
அவள் தலைமுடி முதல்
உள்ளங்கால்நகம் வரை
ஓவியம் வரைந்து தருகிறேன் !!

No comments: