Thursday, August 6, 2009

ஓர் அந்நிய இரவு ...


யாருமற்ற என் இரவிற்கு
துணையாய் அழைப்புவிடுத்தேன்
கனவுக்கும் ... காதலுக்கும்

கனவு கைகளை பற்றிகொண்டது
ஓர் உருவமற்ற உயிரோடு ...

அங்கே அவன் அவள்
விரல்களை பிடித்து வருடுகையில்
உயிர்கொண்டெழுகிறது காதல் ...

அவள் அவனது
தலைகோதும் தருணங்கள்
காதலை ஆசிர்வதிக்கிறான் கடவுள் ...

இதென்ன புதுஉணர்தலாய்
அவனும் அவளும்
வெட்கப்படும் காதலில்
கண்ணாமூச்சி ஆடுகிறது காமம் ...

ஏதோவொரு தேடுதல்வேண்டி
இருவரும் தொடங்கினர்
நீண்ட தொலைவு ...

காதல் காபிகடையிலும்
காமம் கடற்கரையிலும்
ரொம்ப அழகாக
தனித்தனியாய் விற்றுகொண்டிருந்தனர்
கலியுகவாதிகள் !!

பயமும் , விரக்தியும் கலந்த
வேரற்ற மனதுடன்
கனவையும் காதலையும்
கலைத்து நடுசாமம்
நித்திரை முறித்தேன் .!.

No comments: