Sunday, July 21, 2013
வேண்டுகோளுக்கு இணங்க
1. இயேசுபிரானே...
மரித்த மூன்றாம்
நாள்
உயிர்
மீண்டுவிட்டார்
பாவத்தின்
ரட்சகன் !
உங்கள்
பாவங்களுக்கு
என்னை
மூழ்கடியுங்கள்
உயிர்த்தெழவெல்லாம்
மாட்டேன்
***
2. முட்டாள் பிதா
அழுகிறார்
கருணையும்
பாவமும்
சமத்தராசில்
தொங்கும்
நடைமுறையில்
குழந்தையைப்
புணர்கிறார்களாம்
ஆஃபாயில் உடைந்ததற்கு
தள்ளுவண்டிக்காரனைச்
செருப்பால் அடிக்கிறார்களாம்
இயந்திரத்தின்
பழுதிற்கு
முதலாளி
“தேவிடியாப்
பயல்களே“ என்கிறானாம்
கூலிகளை
ஏன் அழுகிறாய்
பரமபிதாவே ??
***
3. ஸ்தோத்திரம்
தூய ஆலயத்தில்
மெழுகுவர்த்தியை
ஒவ்வொருவராக
ஒவ்வொருவராக
ஒவ்வொருவராக
வந்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்
வால்சன்
பாதிரியார் அமர்ந்துவிட்டார்
மன்னிப்புக்
கூண்டிற்கு
உன்னைத்தான்
அனுப்பவேண்டும்
முதல் ஆளாக
எம் புனிதனே
***
ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
இன்று மதியம்
இருவருமே
சேர்ந்துதான் உணவருந்தினோம்
கோல்டுபிளாக் புகைத்துக்கொண்டே
“ஆமென்” (டிவைன்
காமெடி)
என்ற சமீபத்திய
மலையாளப்படம் குறித்து
கையை அசைத்து
அசைத்து
கதையை அவன்
அவ்வளவு சிலாகித்துப் பேசியபோது
நான் நிஜமாகவே
அத்தனை அத்தனை
சந்தோசத்திற்குள்
சென்றிருந்தேன்
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
மறுபடியும்
புகைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும்
அவன் வீடுவரை
நடந்தேதான் சென்றோம்
நடுநடுவே
நீ சந்தோசமாக
இருக்கிறாயா என்றான்
அவன்
கையைப்பிடித்துக்கொண்டேன்
சிரித்தான், உன்
சிரிப்பின் உருவம்
குழந்தைகளுக்குரியதுடா!
என்றேன்
அதற்கும்
சிரித்து வைத்தான்
அழகாய் இருந்தது
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
வழியில்
வாங்கிவந்த பால்பாக்கெட்டின் ஓரத்தை
சிசர் கொண்டு
மென்மையாக கத்தரித்து
அவனது
செல்லப்பூனைக்கு நிதானமாக ஊற்றிக்கொடுத்தான்
தனிமையை
நெஞ்சுருக காதலிப்பதாகவும்
இன்னும் படிக்க
வேண்டியப் புத்தகம்
நிறைய மீதம்
இருப்பதாகவும் சொல்லிக்கொண்டான்
மீண்டும்
பார்க்கலாமென்று
நானும் வீடு
திரும்பிவிட்டேன்
எதற்காக ஆனந்தன்
தற்கொலை செய்துகொண்டான்?
ஆனந்தன்
அழைத்திருந்திருக்கிறான்
23 மிஸ்ட் கால்ஸ்
கிடைக்கிறது
மகிழ்ச்சியின்
களைப்பில்
நான் ஏன்
இப்படித் தூங்கிப்போனேன்
ஆனந்தன்
எதற்காக தற்கொலை
செய்துகொண்டான்?
மழை
வலுவாகப்பெய்கிறது
இடுகாட்டிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
ஆனந்தன் தற்கொலை
செய்துகொண்டான்
Sunday, July 14, 2013
அரேபிய ராசாக்கள் 30
சாமத்தில்
உனது ரோமதீர்த்த
நினைவுகள் அடுக்கி
சுயம் இன்புறுகிறேன்
திருட்டுத்தனமாக
எனது படுக்கைஅறை
ஓவியத்தின்
கண்கள் சுகித்துக்கொண்டிருப்பதாக
திடுக்கிட்ட
ஒரு கணம்
சோகமுற
காட்சியளிக்கும்
அதன் அரேபிய
இமைகளின் ஞாயம்
தரிசித்தது
என்னை..
தனித்துவமாக
உனக்கு எழுதிய இக்குறிப்பு
உயிர்ப்பித்த
வெளிச்சம்
இப்பெரும்பாலையை
மலர்வனமாக்குகிறது
பேரன்பே...
சந்திக்கையில்
உன் மார்
அமர்ந்து
நம் வெயில்
தீர்க்கும்
அது
அறை எண் B-15 காலியாக இருக்கிறது
குளிரில்
சுருங்கிய குறி போல
துயரத்தின்
கண்கள் மீதேறி
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
தனித்த என்னை
இந்த இரவு
பழகியிறாத
குழந்தையிடமிருந்து
எளிதில்
பெறமுடியாத முத்தத்தைப்போல
என் மீது
நெளிகிறது இந்த இருப்பு
எதன் நகல் இந்த
வெறுமை
இந்த எறும்பு
ஏன் என்னையே
வெறிக்கிறது
நீண்ட நேரமாக
பின் ட்ராப்
சைலன்ஸில்
அதிர்வுற்ற
அறை எண் B-15 ஐ
யாராவது கடந்து
வந்தீர்களா?
பாவத்தின் சம்பளம்
சுகப்பிரசவ
நேரத்து யோனியென
தாங்காத வலி
காட்டித்தருகிறது
தேநீர்கோப்பையின்
அடியில்
நீ மீதம்
வைத்துப்போன
குரோதம்
அப்பொழுதுதான்
பிறந்த
குட்டிநாய் கண்
திறப்பதையொத்து
பனிக்காலத்தில்
உனது பார்வையின்
ரேகையிலேயே
விரியும் என்
யோனியெங்கும்
பூனையின்
ரோமங்கள் துளிர்த்திருப்பதை
சொல்லவும்
வேண்டுமா ?
துரோகத்தின்
வெயில் விழுந்து
வளரும்
பூச்செடி முன்
நின்று
புன்னகைத்துக்கொண்டிருப்பதின்
திடம்
எங்கு கற்றாய் ?
உனது குரூர
வெற்றியின்
விரல்கள் ஏந்தி
என்னை ஸ்பரிசி
மேலும்
விரைத்தக்
குறிகொண்டு வன்புணர்
பிறகு
நசநசத்துச்
செத்துப்போ
கிறுக்கல் வரி
சாத்தான் ருசித்த பைத்தியக்காரியின் முலைகளில்
முட்டாள் கவிஞனின் வாடை என்கிறது ஒரு வரி
சாத்தான் புணர்ந்து கைவிடப்பட்டப் பிறகே
பைத்தியக்காரி;
பைத்தியக்காரியின் முலைகளில்
புத்திசாலிக் கவிஞனின் வாடை என்கிறது மற்றொரு வரி
இரண்டும் இல்லை
புணரும் முன்பு
சாத்தான் கடவுளாகத்தானிருந்தான் என்கிறது
இன்னும் ஒரு கிறுக்கல் வரி
***
சன்னிதானம் நிறைய
நிறைய
ரோஜா மலர்களால்
அலங்கரிக்கும்
உனது மெல்லிய
குளிர்ந்தக் கரங்கள்
தொடும் முன்
தனிமையின்
பிரசித்திப்பெற்ற சன்னிதானமாக
இருந்திருந்தது
என் அகம் !
அப்பெருஞ்செயல்
செய்துகாட்டிவிட்டு
முத்தத்திற்கு
மறுப்பு தெரிவித்து
முகத்தை அங்கும்
இங்கும் திருப்பும்
குழந்தையைப்போல
சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்
கொஞ்ச நேரமாய்
கிடைக்காத
முத்தத்தின் ஈரத்தை
பருகிக்கொண்டிருக்கிறேன்..
தானாய்ச் சரியும் மரம்
எச்சில் காதுகளுடைய உனதன்பை
இனி
எந்தக் கூட்டிற்கும் ஊனநடை பழகவிடாதபடி
உந்தன் துணைப்பறவையின்
நாக்கை அறுஅறுவென அறுப்பதற்கென்றே
பத்திரப்பட்டிருக்கிறது ஓர்மம்!
எங்கள் வீட்டு வரவேற்பறையில்
நீ கொட்டியிருந்த
பொய்க்குற்றச்சாட்டல்களோடுப்
படிந்திருக்கும் கண்ணீரின்
ஒரு சிறு துண்டை
பத்திரப்படுத்தியிருக்கிறேன் ஓர்மையில்
வரும் நாட்களில்
அடர்த்தியான மழை இரவுக்கென
படுக்கையறையினுள்
நீங்கள் தயாராக முன்னெடுக்கும் உரையாடலில்
யதார்த்தத்தில் வந்துவிழும்
என் ஓர்மம்
நிதானமாக
என் விஷம் முறியும்.
ஆராதனா எனும் பேய் 50
எங்கு திரும்பினாலும்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
பிரிவு என்பது வறுமை
பிரிவு என்பது பயம்
பிரிவு என்பது கண்ணீர்
பிரிவு என்பது வலி
ஆராதனா
ஜன்னல் தீண்டி விரல் அசைக்கும் மழையிடம்
நெஞ்சுக்கூடு விம்மச் சொல்லிக்கொள்கிறேன்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எனது தானென்பதை
ஆராதனா உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எங்கு திரும்பினாலும்
பிரிவு என்பது காதல்
பிரிவு என்பது காதல்
Subscribe to:
Posts (Atom)