Monday, August 17, 2009

கடற்கரையோர முத்தங்கள்..

மலம் கழித்து
மூத்திரம் தெளித்து
அதில் விரல்களிட்டு
வண்ணமென்று கத்தி
படம் வரைகிறார்கள் !!

வாய்பிளந்துகொண்டு
வேடிக்கை காண
என்பின்னால் நீயும்
உன்பின்னால் நானும் !!

சாக்கடை கொசுவில்
மலம் மொய்க்கும் ஈயில்
நாறும் அட்டைபூச்சியில்
உயிர்திசுக்கள் பொறுக்கி
இவர்களை செய்திருப்பானோ சாத்தான்
சர்சைபடுத்துவதாயானால்
மானம் கெடும் காதல் !!

சந்தேகங்கள் நிறைவுற
புள்ளியிட்டு தீர்க்க
ஒருமுழம் கயிறும்
ஆறடி குழியும்
அவசியப்படலாம் !!

யோசனைகளிலேயே
மூச்சுமுட்ட
கழுத்தறுந்து விழ
காதல் சாக
சீய்ய்.... போங்கப்பா .

No comments: