Friday, May 28, 2010

மரணம் பழகும் விரல்கள்..



முதலாவதாய்
துவங்கிய கவிதை
அவள்!

வார்த்தைக் கோர்ப்புகள்
மட்டும்
கடைசியானபாடில்லை!

ஒரு குறிப்பிட்ட
மௌனத்தை
மௌனம் என்று
சாதாரணமாகச்
சொல்லிவிடுவதற்கு
தயக்கம் தடுத்துவிடுகிறது!

மழலைகளை
ரயில் தண்டவாளங்களைப்
போல கடந்துவிட முடிவதில்லை,
சேர்த்துக் கொள்ளலாம்
இனி அவளையும்
காதலையும்
அதனோடு!

http://youthful.vikatan.com/youth/Nyouth/arumugampoem240510.asp

நன்றி விகடன்.

Monday, May 24, 2010

மரணித்துவிடாத தற்கொலைகள் !



பறவையின் நிழலில்
கரையொதுங்கிய வானம்
அவள் !

நிலவுப் பெருங்கடலின்
எதிரொளி வெளி
நான் !

மயானச் சதுக்கத்தில்
மனிதனெரியும் விறகு
காதல் !

விண்மீன் இதய ஓவியமும்
சூரியமுகப் பென்சிலும்
இடர்ப்பாடுகளில்
புனையாக்கடிதம்
அல்லது காகிதம்
கவிதை !


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2953

நன்றி யிர்மை. 

Saturday, May 22, 2010

காதல் மழை



ஈர முத்ததினொரு துளி
மழையெனக் கசிய
பேசும் மௌனம்
பேசிக்கொண்டேயிருக்கிறது
மௌனங்களாகவே !

ஒரு காகிதத்தை
நிர்வாணப்படுத்திய
பெருமூச்சில்
உருகி வழிகிறது
என் காதல்
கவிதை வார்த்தைகள்
ஏதுமின்றி!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8830:2010-05-21-16-22-58&catid=2:poems&Itemid=265


நன்றி கீற்று.. 

Monday, May 17, 2010

நேசிக்கும் பெண்ணை ஆகாயத்திலிருந்து தூவுதல்..!



நிசப்தத்தின்
பெருவெளி யெங்கும் வெம்மை...

ஒரு மரணம் தான்
கவிதைக்குக் காரணியாகத்
திணிக்கப்படுகிறதென்றால்
காதலை வெறுக்கத் துணிவதென்பது
இயல்பு மீறலல்ல! 

மாற்றம் வரம்பு மீறி
அடுத்து இன்னொரு
கவிதையில்
உன்னை மழையெனலாம்
மறக்காமல் பெய்துவிடு!

நேசிக்கும் பெண்ணை ஆகாயத்திலிருந்து தூவுதலென, 
மறந்தும்
எங்கும் எழுதாது
காற்றில் மடித்து
காகிதத்தின் கதவைச்
சாத்திவிடப் போகிறேன்.

நாளை உன் மழலை
விளையாட.. கப்பல்
தேவைப்படும்.! 


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2933

நன்றியிர்மை. 

Tuesday, May 11, 2010

...................



தழுவல்..
வியர்த்தல்..
வியத்தல்..
முறைப்படி..

மற்றபடி.. 
மறைத்தல்..
கலைத்தல்..

விருப்பம்..அல்லது..நிர்பந்தம்..!

யதார்த்ததை உள்ளங்கையில் சொருகிவிடுதலென..



இத்தோடு..
முடியப்பெற்று விடுமெனதான்,
தகித்துக் கொண்டிருந்தது...
மௌன பீடம்.

சந்திப்புகளின் வாசமும்..
சிநேக கைகுட்டையும்,
எப்பொழுதுமே...
ஒரு நெருடலாகவே
அமிழ்ந்து விடுகிறது
எல்லோருக்குமான இதயத்தில்.

கனங்களும்..
கணங்களும்..
ஒருசேர நிர்ப்பந்தித்து வைத்திருக்கும்
மௌனபீடம் என்பது ..
அத்தனை சுலபத்தில்
உடைபடுவதானதாக அல்ல.

புரிதலும்..
புரிபடுதலும்,
எளிதேயெனும்
கோர்வையாயிருந்தால்..
அவள் உள்ளங்கையில்
சிவப்புபட்டிருக்கும்
அம்மருதாணி சிவப்பைப் போல
எவ்வளவு அழகானதாக
துளிர்ப்புறும்
இந்த வாழ்வென்பது.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2893

நன்றி யிர்மை.

Monday, May 10, 2010

...................



நிகழ்ந்து முடிந்தது மரணம்.. 
நட்சத்திரங்களில்லா வானம்
அழுக்கு!

எவருக்கும் புரிவதில்லை
அவளுக்கு மட்டும் புரிவதேயில்லை.. 

Tuesday, May 4, 2010

பனிக்காடு.



நிலவறையில்
கடலுறங்குவதாக
எழுதிச்செல்லும்போது
கவிதையொன்றின்
சுவாசம் முட்டுகிறது !

இரண்டாம் பத்தி
இப்படிப்பிரிபடுகிறது
குளக்கரையில்
நிலவு துயிலுறுமாம் !

ஜீவநடமாட்டமேதுமில்லா
விழிகளிரண்டின்
மேற்பாகமுள்ள நெற்றிப்பொட்டில்
மாறி மாறி மீள்கிறது
மேகக்கூட்டம் !

மெல்லப் பனிவிலக்கி
அதிகாலைச்சூரியன்
ஆளெழுப்பும் பணியினை
நித்தமும் செவ்வனே செய்வதாகி
நிர்ப்பந்திக்கிறான் கடவுள் !

சாத்தானைச் சந்திக்கப்
புறப்படுகிறேன்!
யாரங்கே..?
திறவ கோலுங்கள்.. 
அவசரமாக வழி தேவைப்படுகிறதெனக்கு...

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2864

நன்றி யிர்மை.

Monday, May 3, 2010

எழுத்தின் வன்மம் .




வாசித்திருந்த
புத்தகத்தை
சாத்திவிட்டு
சலனமின்றி தொடர்ந்தது
அதன் ஞாபகங்களில்
மனப் பக்கங்கள்.
 
ஒரு கட்டத்தில்
நான் தொலைந்த
அதே நிமிடத்தை தொட்டுவிட
நடப்பு நிமிடத்தில்
தொலைபட்டேன்.

ஒரு முறைக்கு
ஒவ்வொரு முறையும்
தாக்கிவிடுகிறான்
எழுத்துக்காரன்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005022&format=html

நன்றி திண்ணை..

Sunday, May 2, 2010

...................



குறிப்பிட்ட..
இடமொன்றில்,
தீர்மானப்படுகிறது!
அவள் தீட்டாத ஓவியம்
மௌனமென்ற வரைபடத்துடன்.!

ரசிக்கும் காற்று
சிந்திச் செல்கிறது
இசையெனும் புள்ளியினை.!

தூர நின்று
கிளியின் வண்ணமொத்த
இலையின் பனித்துளி
வெட்கத்தை எழுதிச் செல்லும் பொருட்டு..

இக்கவிதை முடித்து வைக்கின்றது
முதல் முத்த ஞாபகத்தினை.!