Monday, August 31, 2009

தேடல்..


முன்பொருநாள்
புகையிலையில் தொடங்கிய
நமக்கிடையேயான முரண்பாடு
பிற்பாடு நீ
பிரிவிற்கு என்னவெல்லாம்
காரணங்களறிய முயற்சிப்பாயோவென
பயந்தே தவிர்க்கிறேன்
நமக்கான சந்திப்புகளை..

சிறுபிள்ளை காலத்தில்
முற்றத்தில் மலம் கழித்தேனென
பாட்டி அடித்தது ..
அம்மா மார்களில் சாய்ந்து
அப்பாவிடம் கதை கேட்டது ..
எதிர்வீட்டு அக்கா கைபிடித்து
பள்ளிக்கு போனது ..
பக்கத்து வகுப்பு தேவியிடம்
இனகவர்ச்சியை காதலென புரிந்து
கணக்கு ஆசிரியரிடம் கொட்டுவாங்கியது ..
.............................................
இங்ஞனம் நீண்டுகொண்டே
நீயின்றி போன
என் எல்லா நிமிடங்களும்
என்னிடம் பொக்கிஷமாக ...

நினைவுகள் பொறுமையின்றி
நான் நீயென முண்டியடிக்கிறது
முன்னேறி வர...

எனையும்
எனைசேர்ந்த எல்லாமும்
என்னை தேட
நானோ...
விடுபட்டுபோன காதலையும்
விடைபெற்றுபோன உன்னையும்
கவிதைகளில் தேடிகொண்டிருக்கிறேன் !!

No comments: