Sunday, August 2, 2009

சிங்களனுக்கு பிரபாவிடமிருந்து மூர்க்கமாயொரு ...

விந்தணுக்களும் குண்டுதுகள்களும்
ஒருபோதும் தீரபோவதில்லை
விதியேயென்று வாழ்வதாயுமில்லை ..

புத்தனுக்கும் பேய்பிடிக்கும்
சாமிகளும் ஆயுதமேந்தும் ..

இதுவொன்றும்
தனிமனித உந்தலில்லை
ஒடுக்கியவுடன் ஒடிந்துவிட
இனம் அழிந்துவிடும்
இனியும் கனவு காணாதே ..

ஏந்தப்படும் துப்பாக்கிகள்
என்ஆத்மா தலைதாங்கும்
தனிஈழத்தை தனதாக்கும் ..

நம்பிள்ளைகள் கைகோர்த்து
இனம் மொழி
குண்டடி கற்பழிப்பு
பட்டிணி சாவு
வரலாற்றிலறிந்து
வெட்கப்படும் கண்ணீர்சிந்தும்
முன்னோர்களை தியானிக்கும் ..

இவையெல்லாம் நிச்சயமாய் நிச்சயிக்கும்
கொஞ்சம் காலம் பிடிக்கும் .

No comments: