Saturday, April 28, 2012
Wednesday, April 25, 2012
உன்னை வரைபவன்
பாசிகள் பற்றாத நீர்ப்பாறையென
இருத்தலின் அசௌகரியங்கள்
என்னைவிட நீ நன்றாக
அறிந்து வைத்திருப்பதிலுள்ள
ஆச்சர்யம்தான்
இத்தனை அவமானங்களுக்குப் பிறகும்
இத்தனை நிராகரிப்புகளுக்குப் பிறகும்
இத்தனை கொலைகணங்களுக்குப் பிறகும்
இத்தனை அசைவற்ற மௌனத்திற்குப் பிறகும்..
நான் உன்னை வரைந்து கொண்டிருப்பதின்
சூட்சுமம்!
நன்றி உயிரோசை
வாழ நீளும் மரணம்!
துயர் சாயல் வழியும்
கர்ப்பம் தரிக்கா வயிற்றின்
யாசிப்பினை யொத்து
கடக்க, கலைய மறுக்கிறது
உனது நிராகரிப்பின் வெயிலிலிருந்து
எனது கடல்நீளக் காதல்!
நன்றி உயிரோசை
வான் அழகு சுடர்!
விருப்ப நிழல்
ஒரு மழலையின் நிறத்தோடு
அடர்ந்து பொழியும்
இவ்விரவின் வனத்தில்
கைத்தாங்கலாய் அரவணைக்கிறது
பெருநதியின் வேட்கைத் துளி!
நன்றி உயிரோசை
Monday, April 23, 2012
Sunday, April 22, 2012
Saturday, April 21, 2012
Friday, April 20, 2012
கோமாளி
இந்த ஒற்றைத் தீக்குச்சி
இன்னும் எவ்வளவு நேரம்
எரியும்
காற்றடைத்த பலூன்
குத்தூசியின் கண்படாத வரை
என்றுணர்ந்தால்
அதை ஒரு கவிதைக்கிணையாய்
உங்கள் முன்
என்
முனை உடைந்த எழுதுகோல்
தன்னை சாய்த்தழும்
நன்றி இலக்கியச் சுற்றம்
Thursday, April 19, 2012
Wednesday, April 18, 2012
Tuesday, April 17, 2012
ஒரு பெருவன நிழல்
அன்பெனும் பெருமழையில்
குழந்தைகளாய் நனைகிறோம்
ஆதி உடையின் அரூப வர்ணம்
இரவெனும் வன நதியில்
நட்சத்திரங்களுக்கு ஒப்பாய்
ஜொலி ஜொலிக்கும் இத்தருணம்
மரணத்தை முதன்முறை ருசித்து உண்கிறேன் நான்!
நீயோ அகாலத்தைப் பசியுறச் செய்கிறாய்!
நன்றி உயிரோசை
புணர்தல் மொழி
சிறுமி
பென்சில் சீவுவதை
ஒத்தப் பொழுதுகளாய்
அள்ளிப் பருகுகிறாய் உயிரை
யாதுமாகி
யாதுமாகி
முனகுகிறேன்
உனது பெயரை
எழுத்து எழுத்தாய்
எழுத்து எழுத்தாய்..!
நன்றி உயிரோசை
வேட்கை
நிழல் மேல் ஊற்றிய நீராய்
உனது மறுதலிப்புகள் அனைத்தும்,
வேட்கையின் குரலிலிருந்து
துள்ளிக் கொண்டிருக்கிறது
ஒரு குழந்தையின் முகத்தோடு
எனது பேரன்பு!
நன்றி உயிரோசை
Monday, April 16, 2012
புதிர் விளையாட்டு!
கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும்
மிகுந்த வேட்கையிலிருந்தன
முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்
சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!
நன்றி நவீன விருட்சம்
Saturday, April 14, 2012
Wednesday, April 11, 2012
Tuesday, April 10, 2012
என்றென்றைக்குமான அனார்
குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழையுள்
துயில் மறந்திருக்கும்
அச்சிறுபிள்ளையின் புறம்
ததும்பி உடைந்து நிற்கும்
பர்தா தாயின் வெள்ளை மழை
வறண்டு நனைக்கிறது
பெரும் பாலைவெளியின்
அத்தனை அத்தனை விழிகளையும்
நன்றி உயிரோசை
மரணித்த அதே மைக்ரோசெகண்டில் உயிர்த்தல்!
இரவின் ஜன்னலில் நின்று
பகலின் நிழலென என்னை
அவ்வளவு தத்ரூபமாக கையாள்கிறாய்
ஒரு நதி
ஒரு குளிர்
ஒரு ஆசுவாசம்
ஒரு எறும்பு
ஒரு சிறு இலையினில்
தன்னை வாழ முயலும்
ஒரு மழைப்பொழுதின்
ஈரம் கலையாத கணமது
ஒரு நானும்
இன்னொரு நானும்
துயிர்த்த பெருவெளியது
ஒரு சொல்லை
இன்னொரு சொல்
வெற்றிகொள்ளும் பெருவேட்கையது
பகலின் நிழலில் தீர்க்கமுறப்
படர்ந்திருப்பதென்னவோ நீ தான்
என்பதறிவாயோ?!
நன்றி உயிரோசை
Thursday, April 5, 2012
மறுதலித்தல்
இனிக்க இனிக்கத் தேன் தடவிய
கூரிய கத்தி கொண்டு
எனது இருப்பை அறுக்க முயல்கிறாய்
அப்பொழுதும் சொல்வேன்
கத்தியை லாவகமாகப் பிடியென்று!
உனது இரைச்சலை
உனக்கேத் திருப்பித் தருவேன்
அடிஉயிரை வேரறுக்கும் இசையாக!
விடாது முயல்வாய்
தீர்மானத்தின் கால்களை
மலையுயர மௌனத்திலிருந்து
எதேச்சையாகத் தள்ளிவிட,
அப்பொழுதும் திரும்பி நின்று
பரிசாகத் தருவேன்
ஒரு அழகான ரோஜா மலரை!
நன்றி உயிரோசை
Monday, April 2, 2012
Sunday, April 1, 2012
புத்தனாவது சுலபமல்ல
முன் முடிவுகளெல்லாம்
குப்பையென மண்டிக் கிடக்கும்
மனக்குடுவையை சுத்தப்படுத்து முதலில்
அப்புறம் சுத்தப்படுத்தலாம்
புத்தன் முகத்தை!
உலகெனும் பெருங்கோப்பையில்
நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது யுக காலம்.
விருப்பத்தேர்வு உன்னிடமே விடப்பட்டுள்ளது,
அதன் ஒரு சிறு கண நேரம்
அல்லது
ஒரு முழுயுகம் எடுத்துக்கொள்ளலாம் நீ.
கல் புத்தன்
கடவுள் புத்தனாக
ஒரு ஒருத்தருக்கும் ஒவ்வொரு அவகாசம்
சுயமாய் தீர்மானிக்கப்படட்டும்.
நன்றி நவீனவிருட்சம்
Subscribe to:
Posts (Atom)