Monday, December 31, 2012
Saturday, December 22, 2012
Wednesday, December 19, 2012
வீடு
அவள்
குளியலறையில் தூக்கு மாட்டிக்கொண்ட வீட்டினுள்
ஒரு மிகிழ்வான இசை சலிக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது
நான் கடக்கும் சமயங்களிலெல்லாம்
அனாரின் குழந்தைகள் இடம்பெயர்ந்து விட்டன
கைகளைப்பற்றி அழுந்த முத்தமிட்டபடி
அந்த இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்
தோழி
முன் எப்பொழுதும் போலல்லாததாக இருந்தது அது
மனம் அத்தனை லேசாக இருப்பதாக
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்
விடியற்காலையில் நான் திரும்பியிருந்தேன்
எனது வீட்டில் பர்வீனா காத்துக்கொண்டிருப்பாள்
அன்று நான் அனாரை சந்திக்காமல்
இருந்திருக்கலாம்
நன்றி பண்புடன் குழுமம்
Thursday, December 13, 2012
பனிக்காலத்துக் குறிப்புகள் 2
அடுத்த வருடம் ஏப்ரலில் நமக்குத் திருமணம் நிகழ இருக்கிறது
கடந்த எட்டேமுக்கால் மாத நம் வாழ்வில்
உன்னை சந்தோசமாக வைத்திருப்பதாக மட்டுமே
எனது சிறு நம்பிக்கை
இன்றும் என்றும்
எங்காவது எப்பொழுதாவது
நம் வாழ்வில் ஏதுனும் துளி குறையிருப்பதாக நீ அறிந்தால்
ஒற்றை விண்ணப்பம் உண்டு எனக்கு,
உன் உனக்கு உனக்கே பிடித்த ஒரு நாள்
எங்காவது சென்று திரும்பு
உனக்குப் பிடித்ததைச் செய்
யாதொரு அனுமதியும் தேவையுமில்லை
அவசியமுமில்லை
எந்தக் கேள்விகளும் என்னிடம் இல்லை.
மேலும்
அனைவரும் திருமண வைபவத்திற்கு வருக வருக
நல்ல சுவைமிக்கச் சைவச்சாப்பாடு
நீங்கள் மனதாரப்பாராட்டுவீர்கள்
எனது சிறு நம்பிக்கை
இன்றும் என்றும்
எங்காவது எப்பொழுதாவது
நம் வாழ்வில் ஏதுனும் துளி குறையிருப்பதாக நீ அறிந்தால்
ஒற்றை விண்ணப்பம் உண்டு எனக்கு,
உன் உனக்கு உனக்கே பிடித்த ஒரு நாள்
எங்காவது சென்று திரும்பு
உனக்குப் பிடித்ததைச் செய்
யாதொரு அனுமதியும் தேவையுமில்லை
அவசியமுமில்லை
எந்தக் கேள்விகளும் என்னிடம் இல்லை.
மேலும்
அனைவரும் திருமண வைபவத்திற்கு வருக வருக
நல்ல சுவைமிக்கச் சைவச்சாப்பாடு
நீங்கள் மனதாரப்பாராட்டுவீர்கள்
Sunday, December 9, 2012
பனிக்காலத்துக் குறிப்புகள் 1
அலமாரியின் நடு இடுக்கில்
பளிச்சென
எப்பொழுதும் நீ பொக்கிஷமாக வைத்திருக்கும்
அப்பச்சைநிறப் பட்டுப்புடவையை
கொஞ்சம் எடு பெண்ணே
உள்ளே நான் பொதிந்து வைத்திருக்கும் கடிதத்துடன்
உனக்குப் பிரியமான ரோஜாவின்
இதழ் ஒன்றும் அலைபாயும் (ராஸ்கல், கள்ளா...)
ம்; கண்ணீரோ புன்னகையோ
உன் விருப்பநிழல் போதுமடி பெண்ணே
.
ஒரு நம்பும்படியான பொய்யை
இவ்வளவு ஆச்சர்யத்துடன்
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களெனில்
வைத்துக்கொள்ளுங்கள்
இது
3075-ஆம் ஆண்டு என் மனைவியுடன்
எடுத்துக்கொண்ட புன்னகைத் ததும்பும் சித்திரம்
அப்பச்சைநிறப் பட்டுப்புடவையை
கொஞ்சம் எடு பெண்ணே
உள்ளே நான் பொதிந்து வைத்திருக்கும் கடிதத்துடன்
உனக்குப் பிரியமான ரோஜாவின்
இதழ் ஒன்றும் அலைபாயும் (ராஸ்கல், கள்ளா...)
ம்; கண்ணீரோ புன்னகையோ
உன் விருப்பநிழல் போதுமடி பெண்ணே
.
ஒரு நம்பும்படியான பொய்யை
இவ்வளவு ஆச்சர்யத்துடன்
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களெனில்
வைத்துக்கொள்ளுங்கள்
இது
3075-ஆம் ஆண்டு என் மனைவியுடன்
எடுத்துக்கொண்ட புன்னகைத் ததும்பும் சித்திரம்
பனிக்காலத்துக் குறிப்புகள்
கோடி பட்டாம்பூச்சிகளின் வர்ணம் உமிழும்
பேரன்பின் யதார்த்த முகம்
உனதென
நல்ல மழை வழிந்ததொரு அந்தியில்
ஒரு சிறுபுல்லின் நுனிஎன்னைத் தேம்பி
தேம்பி இறுக்கியதுடன்
மெல்ல விழித்தேன்
பெரும் அமைதி
பெரும் அமைதி
பின் மௌனமாய் அதன் ஈரம் படர்ந்த
கரங்களைக் குலுக்கி
கிமு 23 ஆம் நூற்றாண்டிலிருந்தே
உன் உடம்ஸ்தி எனக்கு மனைவி என்றேன்.
அந்த இரவில்
மூன்று லட்சம் விண்மீன்கள் ஒளிர்ந்ததாய்
இன்று அதிகாலையில்
என்னை மென்மையாய் எழுப்பித் தலை கோதி
கீச் கீச் குரலில் ரகசிக்கிறாய் பெண்ணே;
பெண்ணே இதுஎந்தவிதத்தில் ஞாயம்?!
நல்ல மழை வழிந்ததொரு அந்தியில்
ஒரு சிறுபுல்லின் நுனிஎன்னைத் தேம்பி
தேம்பி இறுக்கியதுடன்
மெல்ல விழித்தேன்
பெரும் அமைதி
பெரும் அமைதி
பின் மௌனமாய் அதன் ஈரம் படர்ந்த
கரங்களைக் குலுக்கி
கிமு 23 ஆம் நூற்றாண்டிலிருந்தே
உன் உடம்ஸ்தி எனக்கு மனைவி என்றேன்.
அந்த இரவில்
மூன்று லட்சம் விண்மீன்கள் ஒளிர்ந்ததாய்
இன்று அதிகாலையில்
என்னை மென்மையாய் எழுப்பித் தலை கோதி
கீச் கீச் குரலில் ரகசிக்கிறாய் பெண்ணே;
பெண்ணே இதுஎந்தவிதத்தில் ஞாயம்?!
Friday, December 7, 2012
ஆராதனா எனும் பேய் 16
16.
பெருமழைக்காலத்து வண்ணத்துப்பூச்சியாய்
என்னுள் படபடத்துக் கொண்டிருக்கிறாய்
ஆராதனா..
நீ நிரம்பிய தனிமையோடு நான் உலவும்
இம்மணல் வெளியெங்கும்
வரைந்து வைத்திருக்கிறேன்
நிழல் தாகமாய் உன்னை
ஆராதனா..
கடல்களுக்குமேலே நூல் பிடித்தாற்போல்
பறக்கும் நமது வானம்
சொட்டிக் கொண்டிருக்கும்
இப்பெரும்பசியில் நர்த்தனம் செய்வதில்தான்
எத்தனை ஆத்மார்த்தமாக உள்ளது
ஆராதனா..
***
17.
ஆராதனா,
அன்றொரு நாள் முத்தமிட்ட
உன் தெளிர்ந்த முதுகினை
ஞாபகத்தில் குறு குறுக்கிறது
கையகப்பட்ட இச்சிறுஇலை
எனது தொலைதேச நதியில் பெய்து கொண்டிருக்கும்
உனது மழையில்
வாதையின் ஸ்பரிசம் தளும்ப
மீண்டும் தொப்பூல்கொடி அறுந்து விழுகிறேன்
அழுகையும் சிரிப்புமாய்ஆராதனா
***
18.
நீண்ட நீண்ட இரவும் பகலுமாய்
பிரிவு தின்று பிறழ்வில் அலையும்
என் நமதுமனசை
மேகம் அவிழும் முதல் மழையாய் விடுவிப்பாயா
ஆராதனா
***
Thursday, December 6, 2012
அரேபிய ராசாக்கள் 26
26.
பேசும் பொம்மைகள் வாங்கி வருவதாக
கடல்களுக்கு அப்பாலிருந்து கொஞ்சியவனிடம்
மழைக் கிழமையின் ஈரத்தை தெளிக்கிறாள்
அனன்யா
தனது முறையில் வழக்கமாய்
கோடையை சிலாகித்துத் தேயும்
அனன்யா அம்மா
எப்பொழுதும் போலல்லாத மௌனியாகிறாள்
கொஞ்சம் கொஞ்சமாய்
விடுதலையை இரைஞ்சத் துவங்கியபடி
பெருங்கானல் படரும் உடைந்த உதடுகளோடு
அணைக்கப்படுகிறது ஈரப் பார்வைகளுடைய
விளக்கு
***
27.
ஈரத்தின் கதகதப்பு அள்ளும் வாஞ்சையுடனான
சப்தம் அற்ற உன் மென்பார்வை
சிதறிக் கிடக்கும் ஈச்சம்பழ மணத்தில்
அடர்துயர் மோதி துரத்தப்படுகிறேன்
மூச்சிரைக்க
முத்தத்தின் கட்டாயம்
அல்லது
நிஜத்தின் புனிதத்தில் சரிய விழைகிறேன்
உனது தொலைகுரல் மீள்கையில்
நினைவில் வற்றாத நதி மீது
சிறு பிள்ளையின் மழையென
பூமிக்கும் வானத்துக்குமாய் துள்ளித் துள்ளிக் குதிக்கும்
எனது முழுநீள வர்ணக் கடல்
***
28.
கிழிபடும் கிழமைகளருகே நின்று
விடுதலையை வாசித்துக் காட்டுதல்
கூடும் கிழமையில்
பொருட்களின் பட்டியலை வாசித்துவிட்டு
அமைதியாக நகரலாம்
ஈட்டுதலின் பொருட்டு தவித்து இருத்தலென்ன
அத்தனை சுலபமாவென
***
நன்றி கல்கி
திரும்புதலின் பாரம்
எனது மனதில் எறியப்பட்ட உந்தன் கல்
கண்ணாடிச்சில்லுகளைப் பொழிந்துள்ளது,
ஸ்தம்பிக்காமல் கேசம் சரி செய்துகொள்
நீ
கொல்லும் நினைவுகள் மீது
ஒரு கூடை வண்ணத்துப்பூச்சிகளின் நிறம்
நீ நிறைந்த என் தனிமை துயரம்
சிலாகித்தல் பழகுதல் அழகு
சூழும் மேகத்தின் உள்
பறக்கும் விமானம் அண்ணாந்து தேடும்
பால்யனாய் திரும்புகிறேன்
நான்
சில்லுகளில் வழியும் குருதி
தோய்த்த விரல்களுடன் வருகிறாய்
நமது பெருங்காதல் நோக்கி
காத்திருப்புகளின்றிப் பிரிவுக்குஏது உயிர்
மௌனத்தின்மேல் மெல்லிய ஒப்பனையுடன்
ஈர்க்கும்
உனது அன்பு பெய்யும் மழையில்
திரும்புகிறேன்
பெருவலியின் தடயங்கள் கழுவி
நன்றி எதுவரை.நெட்
ஆமென்
1.
உனது மௌனத்தில்
தடதடக்கும் ரயில்வண்டியின் அதிர்வு,
எனக்குப் பைத்தியமெனச் சொல்லும்
முந்தைய காதலிகள் உண்டு
நீயாவது மழையில் நனை
அல்லது
கடைசிக் காதலியாக இரு
2.
எனது
தற்கொலைக்குப் பிந்தைய
இரவை
துண்டுத் துண்டாக்கி வை
வருகிறேன்,
உனது தற்கொலையை
கொலையாக மாற்ற!
3.
ஆக்ரோசமாய்
புணர்ந்து கொண்டிருக்கிறது
இருளடர்ந்த இரு நிழல்கள்
வெளிச்சப் புள்ளிக்கான
ஆதர்சக்கோட்டில்
4.
ஆம்
காதலி
யோனியின் ஸ்பரிசத்தில்
மூர்ச்சையாகிக் கிடந்த கணத்தில்
முத்தம் உண்டது
நீயா?
காதலா?
காலமா ?
ஆம்
காதலி
சொற்களை விழுங்கு
மௌனத்தைச் சொல்
ஆம்
காதலி
நீ நிரம்ப நீயே வாழ்.
Saturday, October 20, 2012
மனிதர்கள்
எத்தனைவிதமான மனிதர்கள்
எத்தனைவிதமான வெளிப்பாடுகள்
எத்தனைவிதமான அந்தரங்கங்கள்
எத்தனைவிதமான நம்பிக்கைகள்
எத்தனைவிதமான ஏமாற்றங்கள்
எத்தனைவிதமான நிர்ப்பந்தங்கள்
எனக்கு அசூசையையாக இருக்கிறது
மேலும்
எனக்குப் பயமாக இருக்கிறது
எந்தவிதமான மனிதன் நான்
நன்றி வல்லினம்
நிகழ்வுகள்
ஒருஊரில்
என்று துவங்கும்
ஒவ்வொரு கதையிலும்
ஒரு கதை
இருந்து கொண்டுதானிருக்கிறது
உண்மைகளை உசுப்பிப் பிடித்தவாறு !
நன்றி வல்லினம்
பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்
நீயற்ற வனத்தில்
ஏதுமற்ற மழையாய் உதிர்ந்து விழும்
துயரப் பாடலென நான் மிதக்கிறேன்
பெயர்அறியாப் பறவையொன்றின் சிறகுகளில்
உனக்கான இருப்பை பத்திரப்படுத்துவதில்
மும்முறமாய் கவனித்துக் கொண்டிருக்கிறது
எனது பெருங்கோடை
ஒரு கரமைதுனத்தின் கடைசிக் கணமென
உடைபடும் மௌனபலூனின் நாள்
பெருமழையின் முதல் துளியென
இறுகத்தழுவும் கரங்கள்
ராட்சஸப் பாறையாய் வியாபித்திருந்த
பிரிவு அறிந்த தீராக்காதலின்
ஒற்றை வெளிச்சத்திலிருந்து
அழுந்தமுத்தம் ஒன்று மெல்ல கீழிறங்கும்
துயர் பற்றி எரியும் வனம்
திரும்பும்
வேட்கையின் பெருநதி அணைத்து
நன்றி வல்லினம்
அரேபிய ராசாக்கள் 20
20.
விடுமுறையின் தாகம்
கானலில் ஒளிரும் உனது கையசைவில்,
கம்பி வேலிக்குள் தவறிப் புகுந்த பறவையின் சிறகுகளையே
வெகு நேரம் உணர்ந்து கொண்டிருக்கிறேன்
***
21.
மழை பெய்யும் கானலாய்
இந்நிலம்
எங்கும் உருளும் வெயில் நதியில்
உன் வழியனுப்பிய முகம்
ஏந்தி நிற்கிறது தீபமாய்
***
22.
வெயில் புரண்டோடும் மண்
கொணர்ந்தப் பிரிவுதனை
பூனையாய்க் கழுவுகிறேன்
நேசம் மருகி நேசம் பெருகி
தெப்பக்குளத்தில் கால் கடிக்கும் சிறு மீனாய்
துள்ளும் நினைவலைகளில்
பிரிய முகத்தின் ஈர சுவாசம்
பெரு நிலவாய்
***
23.
பரிசாய் நீ செருகிய
மறந்துவிட முடியாததொரு முத்தத்தை
இரண்டரை மணி நேரத்திற்கு அப்பாலிருந்து
நேசிக்க நேசிக்க நேசித்துக் கொண்டிருக்கிறேன்
திருவிழா ஆரவாரமாய்
மணற்காற்றெங்கும் ஏங்கிப் பொழிகிறது
அன்பின் சொற்கள் அன்பின் அன்பாக
கானல்நீர் என் திசைஅறுந்து செல்கிறது
உனது குரலை எந்தன் இசையில்
செவியாறப் பருகி
***
24.
தனியனாய்
எப்படிக் கடப்பேன்
இப்-பெரும்பாலையை
தினம் தினம் நான்
பள்ளியிலிருந்து வீடு செல்கையில்
நனைந்தோடிய மழையாய் ஞாபகமிருக்கிறது
உன்னை என்கிறாயே
***
25.
நடக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்
மனம் பிசையும் வல்லாத அன்பினிடத்து
கால்களை இரைந்துவிட்டு
வாஞ்சையோடு பற்றிக் கொள்ள
காத்திருக்கும்
ஒரு மலையடிவார நதியினை
விரல்களில் அள்ளிக் கொண்டு
கண் எட்டாத் தொலைவு கடந்திருப்பாய் நீ
எப்பொழுதோ
சந்திக்கும் தருணம் சொல் மறந்துவிடாது
உனக்கு முன் அடைந்திருந்த
எனது நட்சத்திரக்கண்களிடம் பிரிவின் வாதையை
***
நன்றி மலைகள்.காம்
Tuesday, October 9, 2012
காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்
என்றோ ஒரு நாள்
வீசியெறிந்த உணவிற்கு
காலைச் சுற்றும் நாயென
ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்
நினைவில் காடுள்ள
அங்காடித்தெரு பெரும்பசி யானையாய்
பிரிவை மாத்திரமே
அகோரமாய் வரைகிறாய் நீ
மிக உக்கிர வெயில்
நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறது
நாளையொரு பெருமழையில்
அழிந்தும் போகலாம் இத்தாவரம்
அல்லது
ஆழப் புதைந்துக் கிடக்கும்
வேரிலிருந்து மெல்ல
தலையெடுக்கலாம் ஒரு சிறு துளிர்
காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்
யாரால்தான் படித்துவிடமுடியும்
Friday, September 28, 2012
சர்ப்பங்களிலான உலகம்
நெருங்கி வருகிற விழிகளிலிருந்து
சர்ப்பங்கள் வெளியிறங்குவது
அறிந்தே
நகர்தல் மறுதலிக்கிறோம்
விஷம் பூத்த
செந்நிற மௌனம் நிரம்ப
துயர் இசைப் பாடல்
ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து
துரோகத்தையும்
குரூரத்தையும்
குறிப்புகள் சேகரித்து சேகரித்து
மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள்
யாவருக்குமான ஆமென்களோடு
கரைந்து தீரட்டும்
தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த
ஸ்வாதீனத்தில் அல்லாத
நமது வக்கற்ற நேசமும்
நாமும்
நன்றி யாவரும்.காம்
சிறகுகள் இன்னும் பறவையிடத்தே
உடைக்கப்பட்ட
நினைவுப் பறவையின் இறகுகள்
பறந்து கொண்டிருப்பது அபத்த அந்தரத்தில்
வழியும் துயர மழை
நிரம்ப
நாம் நம்பும் பேருலகம்
சிறகுகள்
இன்னும் பறவையிடத்தே
ஞாபகம் அல்ல இருப்பு..!
பெருஞ் செவியில்
திரும்புதலுக்கான இசையாய் நீந்திக் கொண்டிருக்கின்றன
வெயிலற்ற அந்தரங்க நிறங்கள்
நன்றி உயிரோசை
Sunday, September 23, 2012
Wednesday, September 12, 2012
இனி
இறந்திருந்த பட்டாம்பூச்சியின்
மேலூர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளை
வெறித்து அமர்ந்திருந்தோம்
ஒண்ணேமுக்கால் வயது நேயா அழுகிறாள்
பேரன்பின்
நிதர்சன வெயில் கலைத்து
பெரும் பைத்தியக்கூடாரத்துள் திரும்பலாம்
இனி
நன்றி யாவரும் .காம்
சுபீட்சம்
நசுங்கிய வால்
முன் நகரும் பல்லி
கண்ணாடியில் பளிச்சிடும் இமேஜ்
இரவென்பது
வெறுமனே இரவு மட்டுமா
நன்றி உயிரோசை
அர்த்தக்காடு பற்றி எரிகிறது
எந்தப் பறவை விழி அகல
நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதோ
ஆதியின் கூறுகளை
புராதனங்களாகப் பெயர்த்தவாறு
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்
எது எதையோ குறித்து
நன்றி உயிரோசை
Monday, September 10, 2012
Tuesday, September 4, 2012
சொல்லிவிடமுடியாத கோடை
ஒரு சொல்லிவிடமுடியாத கோடையை
பார்வையில் செருகி விரைபவளிடம்
என்ன சொல்லியிருக்கக் கூடும்
மழை நின்ற இம்-மரத்தின் கிளை?
வெயில் குடித்த குடியை
ரோட்டோரத்தில்
சிறுநீராக நனைத்துக்கொண்டிருந்தவனிடம்
நான் எதுவும் சொல்லவுமில்லை
கேட்கவுமில்லை
நன்றி உயிரோசை
ஆமென்
பசித்த நாக்கை வெட்டி வீசத்
துரத்துகிறீர்கள்
பொறுமையாக
குடில் செய்துகொண்டிருக்கிறேன் நான்
நாய் தொப்பலாக மழையில் நனைந்துள்ளது
நன்றி உயிரோசை
Subscribe to:
Posts (Atom)