Wednesday, August 5, 2009

பிரிந்துபோன மனைவிக்கு ... கடிதம்


நீயில்லையென தெரிந்துகொண்ட
பக்கத்துவீட்டு குழந்தைகள்
வீட்டுக்கு விளையாடவருவதில்லை
சுடுகாடு பக்கம்போனா
அம்மா அடிப்பாங்களாம் !!

நீயற்ற திமிரில்
இந்த மழைநின்ற வானம்
மொத்த ஈரத்தையும்
என்னிடம் கொட்டிசெல்கிறது !!

உச்சக்கட்ட வன்முறையில்
உதடுகள் இங்கே
எப்போதோ நீ சிந்திய
புன்னகையை தேடி
காற்றோடு !!

இல்லை என்பது
உனக்கு நான்மட்டுந்தான்
எனக்கு இந்த உலகமே ...

உனக்காக ஜனிக்கபட்ட
உயிரின் காதலைமட்டும்
எங்கு எடுத்துசெல்கிறாய் ??

முகவரி தொலைத்த
இந்த உயிர்க்கு
முதல்வரி கொடு ...

புரிந்து கொள்
பிரிதலின்றி காதலில்லை
வா..................காதலிக்கலாம் .,

No comments: