Tuesday, September 29, 2009

ஓருயிரின் வலி..
















தேவதைகளுக்கென்றேயான

வெள்ளாடை களைந்து
எனையீர்த்த கருநிற உடையணிந்து
மெல்ல இசையுடன் வருபவள்
விரல்கள் இறுகபற்றி
உயரே பறப்பேன்..

அப்பொழுதினில் அவளது அழகான
குட்டி இதயத்திலிருந்து
கதையோ கவிதையோ திருடுவேன்..
கூடவே ஒருசில முத்தங்களையும் சேகரிப்பேன்..

காற்றின் ஈரம்
தீரும் தருணம்
அவளெனை இறுக்க கட்டிகொள்வாள்
நானவள் மார்போடு
என்முகம் பதித்து
கனா காணதுவங்குவேன்..

அவளோ ; தேவதையானவள்
காமம் ரசித்ததில்லையென
அவளோடு எனையும்
அதனுள் அமிழ்த்துகொள்வாள்..

குறைந்தபட்ச நொடிகளோ
அதிகபட்ச நிமிடங்களோ
காமத்தின் பசிக்கு
உயிர்கொடுத்து..பின்
தாமதமேதுமின்றி..
அவள் வாய்வழி ராஜகுமாரன்
என்னுள்ளங்கையில் வந்திறங்குவான்..

அன்றிரவு
விண்மீன்களும் நிலாவும்
விடுமுறைதினமாக ஏற்றுகொள்ளும்..
மழை மட்டும் பணியெடுக்கும்..

ஆகாஷம் முழுதும்
மூவர் மட்டும் கொண்டாடும்
திருவிழா தொடங்கும்..

இரவு தீரும்
கனவு முற்றும்
நண்பனும் நானும்
அடுத்த..அடுத்த..வருடமாய்...
திருமணம் தள்ளியிட்டு தடைபட்டதான
உயிர் அண்ணனுக்கு
பெண்தேட விரைவோம் ..!

Thursday, September 24, 2009

போதையின் மிச்சம்..!


காதல் முத்தி
கனவு நைந்து
சடலம் ஈமொய்த்து
கவிதை மறந்து
இரவின் உடைந்த நிழலினில்..

தாழிட்ட கதவின்
ஒளிபூசிய துவாரம்
அம்மணமாய் காமுகன்
அணைத்தபடி எனதவள்..

நேற்றுவரை மைகசிந்த
ஈரம் திங்காது
காற்றினில் கிழிபடாது
உயிர்நீத்த காகிதங்கள்
பத்திரமாக அடைக்கப்பட்ட அலமாரி ;
நான் அவள் அதுவாகிய காதல்..

ஓரோரத்தில்
முன்னொரு ராத்திரியின் எச்சம்
சாமத்தில் கனவுகளோடு என்பிள்ளை..

ஒளிபூசிய துவாரம்
இருள் உமிழ
படுக்கை முனக ;
மாண்டவன்
மாண்டுபோனவன்
மூச்சுமுட்டிய கண்ணீருடன்
சலனமின்றி தடயமின்றி..

அந்தர வானம்
நூல் ஊஞ்சல்
காற்றின் கைகள்
ஆடுபவன் நானே..

Saturday, September 19, 2009

சாதிகள் இல்லையடி பாப்பா..


பின்புலமும்
முன்பலமும்
மரமண்டையில் ஓங்கியடிக்க
பின்னும் துளிர்க்கிறது
காதல்; கவிதையாகயின்றி..

தேவதை கனவுகளின்றி
எல்லா கனவுகளிலும்
தேவதைகளின் எகத்தாளம்..

ஏக்கதண்டனைகள்
விரும்பியே நுகர்கின்றன
சிறைசுவாசம்..

நானும் நிலாக்கு போணும்
அந்தகிழவிக்கு கிடச்ச ஏணிய
அப்பாட்டசொல்லி எனக்கு எப்பம்மா வாங்கிதருவ;
சாமி எதுக்கும்மா கண்ணகுத்தும்;
எப்புடிப்பா காத்த சட்டபைல புடிச்சுவெச்சுக்கிறது;
இப்படி நிறைய நிறைய
முடிவிலி கேள்வி பதில்களோடு
காலத்தின் கட்டைவிரலில் ஏறிநின்றுகொண்டு
தொண்டைகிழிய கத்த ஆரம்பிக்கிறேன்..

காதல்னா என்னம்மா ,
ஏம்பா இருதயம் வலிக்குது ,
சாதினு ஒண்ணு எங்கிருந்துடா துவங்குச்சு.............?

பின்புலமும் முன்பலமும்
மரமண்டையில் ஓங்கியடிக்க............

Monday, September 14, 2009

உயிர்..

யோனி பிண்டம்
வன் லிங்கம்
ஒட்டி ஒழுகி
வயிறு கிழிந்தோ
யோனி விரிந்தோ
விரட்டப்பட்டிருக்கலாம்..

விழுந்தவுடன்
இருமுலை கசாயம்
மூச்சு சொருகி
மார்போடோ
உள்ளங்கையோடோ
ஏந்தப்பட்டிருக்கலாம்..

பின் அது; மெல்ல
நட்பின் கைபற்றி
காதலின் கன்னம் விழுங்கி
முதலுயிர் யோசித்திருக்கலாம்..

வாழ்வின் வாய்க்காலில்
மென் நாக்கோடும்
கொடு பற்களோடும்
நெடுக வழிந்தோடி
மங்கிய வெளிச்சத்தோடும்
கைதடி உதவியினூடும்
சிலகாலம் நடமாடியிருக்கலாம்..

பின்னொரு நன்னாள்
சதைதுண்டம்
மக்கியோ..சாம்பலாகியோ..
போயிருக்கலாம்;
ஆனாலும்..
முதலுயிர் மீண்டும்..
அதே யோனி
அதே லிங்கம்
நீண்டிருக்கலாம்... உயிரொழுகி.

Thursday, September 10, 2009

மாலைநேரத்து மயக்கம்..


எங்கே அழைத்து செல்கிறாய்
தேநீர் கடைக்கு..
நீ தலையசைத்தால்
இங்கேயே பருகலாம்
அவள் புன்னகைக்கிறாள்
புரிந்தா இல்லை புரியாமலா..!

தேநீர்..
உனக்கா - இல்லை
அதற்கா..!

நீ தேநீர் பிரியய்
நான் காதல் பிரியன்
மெதுவாகவே வா..!

தேநீர் ஆவியோடு
நம்காதலும் சேர்ந்து கொண்டதோ
எல்லோரும் நம்மையே
உற்று உற்று பார்க்கிறார்கள்..!

உனக்கொன்று தெரியுமா
தேநீரும் கோபப்படும்போல
உன் தாமதத்தை
என் கைகளில் சுட்டுகாண்பிக்கிறது
அட..இதற்கும் புன்னகைதானா..!

அசைவுகளிலும்..
தொடுதல்களிலும்..
சிந்திய தேநீருக்கு வருத்தபடாதே
காதல் துடைத்துகொள்ளும்..!

ஏன் இத்தனை கூட்டமா..
அடி - வாங்கபோற நீ
உன் தேநீர் நேரம்
எல்லோரும் குறித்துவிட்டார்கள்
இனி இடம் மாற்றிவிடுவோம்..!

பாதி தேநீர் மீதிவைத்துவிட்டு
கிளம்பி போய்விடாதே
ஏல போட்டியும் நடக்கலாம்
கலவரமும் வரலாம்..!

தேநீர் தீர்ந்துவிட்டது
ஏய் , போகலாமா
காதல் இன்னும் தீரவில்லையே..!

இப்பொழுதெல்லாம்
தேநீர் என்னையும் துரத்துகிறது
உன்னை தேடிகொண்டு..!

கொஞ்சம் தேநீர்
கெஞ்சும் நான்
கொஞ்சும் நீ
நிறைய கவிதைகள்..!.

Saturday, September 5, 2009

முலைகள்..


கல்லூரி வளாகத்தில்
எட்டோ பத்தோ
கை கால்கள்
கூட்டு சேர்ந்துகொண்டு
மார்க் போடுகிறது ..

நாளையோ மறுநாளோ
குழந்தையின் பசிக்கு காத்திருக்கும்
பால்பீச்சும் முலைகள்
வலியை கோபத்தை
எச்சில் தின்றுதீர்க்க
முயன்று தோற்கிறது..

வெட்டி விவாதம்
நீளும் விதண்டாவாதம்
எதைகொண்டு அடிக்க இவ்இளைஞர்களை..?

எரிந்து தீர்வார்கள்..,
இருநிமிடங்கள்
அம்மாவின் கண்களை
உற்றுநோக்க சொல்லலாமா..?

Thursday, September 3, 2009

கடைசி பக்கம்..!*


இன்றைய மாலைக்கு பின்னால்
என்னை தொடர்புகொள்ள
உன் உள்மனம் தூண்டலாம்..
தூண்டினால்..
துளி கண்ணீர் விடு
பின் தொடர்பை துண்டித்துவிடு..!

உன் தொடர் மௌனத்தின்
காரணம் புரியவில்லை
தேடவும் மனமில்லை..
எதற்கும் ஆசைப்படு
என்னை மட்டும் விட்டுவிடு
தொலைதூரம் போய்விட்டேன்
நினைவுகளை திருடிகொண்டு...

வலி தாங்காது நினைவுகள்
வழி சொல்ல முனைகிறது
ஆற்றிலோ பாழ்கிணற்றிலோ
எரிந்து ஓடிவிடு..
அருகே செல்கிறேன்
மனம் துண்டுதுண்டாய் உடைகிறது
மீன்களாவது காதலித்து வாழட்டும்...

புரிதல் பிரிதலென்ற கத்தியால்
காதலை குத்தி கிழித்து
காற்றினில் பேயாக அலையவிட
இனியொருமுறை திராணியில்லை
முன்னுரைத்த ஏழுஜென்மமும் அவசியமில்லை
நீ நீயாக வாழ்ந்துவிடு
நான் நானாக செத்துபோகிறேன்...!*

Tuesday, September 1, 2009

அரேபிய ராசாக்கள் VI



இன்னும் மூன்று, நான்கு வருடங்கள்

கழித்து என் பெற்றோர்

விருப்பத்திற்கிணங்கியோ,

வாழ்கையை வாழ்க்கையாய் வாழ

கண்டிப்பாய் பெண்துணை

தேவையென்று நான் எண்ணினாலோ

உறுதியாக திருமண பந்தத்திற்கு

உட்படலாம்..

வரும் அந்த அப்பாவி பெண்

முதல்இரவிலோ,

இல்லை இரண்டாம்,மூன்றாம்

இரவுகளிலோ

என் மனசை தேடதுவங்குவாள்..

அந்நேரம் எப்பவோ என் மனசை

வளைகுடா நாடுகள் தின்று செரித்து

ஏப்பம் விட்டுவிட்டதென்பதை

கதையாகவோ, கவிதையாகவோ

சொல்ல துவங்குவேன்..

அதை கேட்டுவிட்டு

அவள் " ஓ ".. என்பாளோ,

" உச்ச் " கொட்டுவாளோ,

கண்ணீர்விடுவாளோ,

சரசரவெனமுத்தமழைபொழிவாளோ,

இல்லை இறுக்க கட்டிப்பிடித்து

அவள் மடியில்சாய்த்துகொள்வாளோ,

எப்படி எதிர்கொள்வாளோ ...............

சந்தேகங்களுடன் எனக்கும்,

என்னைபோலுள்ள

வளைகுடா நண்பர்களுக்குமாய்

கதை ஒன்றை எழுததொடங்குகிறேன்,

பின்பு ஏனோ மனமின்றி

நிறுத்தி விடுகிறேன்,

இன்னும் சில காலம் கழித்து மீண்டும்

எழுத தொடங்கலாமென.............