Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்..


எழுதபடாமல் விடுபட்டவைகள்
முனை முழுவதும் மொழிந்தாலும்..
புத்தாண்டு கொண்டாட
புறப்படுகிறது புன்னகையோடு
பேனா ஒன்று..

நேற்றுவரை முயன்றவைகள் ஒப்பமிட்டு
ஓங்கட்டும் புதுவாழ்வு
புதுஆண்டில் யாவருக்கும் ..

நிலங்கள் உடைத்து
அரசியல் செய்யும் பிசாசுகள்
நம்நிலை ணரட்டும் ..

ராஜபக்க்ஷே ,
பிரபாவின் இரவுகளில்
ஒளி வீசட்டும் ..

பிரபா ,
கதவுகள் தட்டி
கருணாவின் கைகுலுக்கி செல்லட்டும் ..

குண்டு கலாச்சாரம்
அமைதியில் கரையட்டும்
அகிம்சை வாழட்டும் ..

கேள்விகள் கேட்போம்
புரிதலுக்கான விடைகொடுப்போம்
கடவுள் இருந்தால் கண் திறப்போம்
இல்லாவிட்டால் யிர் கொடுப்போம் ..

கனவுகளுக்கு வர்ணம் பூசுவோம்
மலர்ந்த முகம் எழுதுவோம்
நன்றிகளுக்கு கை கொடுப்போம் ..

எல்லோருக்குமான தினத்தில்
நானும் நீயும் தான்
நல்ல சமுதாயம் ,
வா.. அன்பாக புத்தாண்டு கொண்டாடுவோம் ..

Monday, December 28, 2009

அரேபிய ராசாக்கள்.. V111


வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில்
பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள்
வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள
பரதேசிகளின் புருவங்களோரமாய்
கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது
காதலையும் , வாழ்வினையும் .

பின் வெயில் தொடங்குமொரு
முதல்காலையின் பரந்த தரைபரப்பு
மணற்துகள்களை வீசி ஆசிர்வதித்து
கானல் நீராகி யொழுகுகிறது
வாழ்வெனப்படுவது
வாழ்தலின் பொருட்டு வாழ்தலென .

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2355

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1773:2009-12-30-02-26-42&catid=2:poems&Itemid=88

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001016&format=html

நன்றி: உயிர்மை, கீற்று , திண்ணை ..

Saturday, December 26, 2009

ஆயிரம் பட்டாம்பூச்சி..




கவிழ்ந்து கிடக்கும்
காமத்தின் மேல்
செங்குத்தாய் ஏறிநின்று
தலையசைப்பதாய் விடைபெறுகிறது
சுயஇன்பம் .

காமத்தின் மடியில்
கண்களடைத்தபடி
கதை கூறி
பிரண்டிருக்கும் , ஒருபொழுது
இன்பமாய் சுயஇன்பம் .

எழுதுகோலின் காதுகளில்
ரகசியமாய் புனைந்து அமிழ்ந்திருக்க
இதுதான் சரியான பொழுதென
புன்னகைத்து நிரம்பி வழிகிறது
சுயஇன்பம் .

தத்தி தத்தி தவழும்
சிறுகுழந்தையினை ஒத்த
நடைபயிற்சியில்
தத்தி தத்தி துவழ்கிறது
சுயஇன்பம் .

யாருமற்ற மொட்டைமாடி இரவில்
வெண்ணிற நிலவு பற்றி
கவிதுவங்கு முன்
தீர்ந்துவிட்டது
இன்னுமொரு சுயஇன்ப கதை .

ஆட்காட்டி விரல்களை போன்றதொரு
பிரிதொரு விரல்
அடைபட்ட கதவுகளோடு
ஆச்சர்யபட்டு துவங்கியிருக்கிறது
பருவத்தை சுயத்தில் .

கடந்த சில இரவுகளாக
எழுதாமல் விடுபட்டதானது ,
நிரப்பியிருக்கும் இச்சமயம்
சுயஇன்ப கவிதைகளின்
எண்ணிக்கையில் கூடுதலாக ஒன்றை .

ஆயிரம் பட்டாம்பூச்சி..
சிறகு விரிக்கும் தருணம்
இரு தேக்கரண்டி சுயஇன்பம் .
விற்று முடிந்திருக்கும் .

Wednesday, December 23, 2009

கிறுக்கல் பக்கங்கள்..


தொடக்கம்..
இங்கிருந்து தொடங்கட்டுமே ,
ஜீரணிப்பில்லாத இவ்இரவுகள்
தின்று பின்பும் தின்று..
சாகிறது ,
புகையிலையும் பிராந்தியுமாய் ..

சில நிசப்தங்கள்
சில கிறுக்கல் காகிதங்களாகட்டுமென
நிதானப்பட்டு ,
பால்யமா..
காதலா..
மழையா..
மானுடமா..
விழிப்புணர்ச்சிகளா..?
கடைசி வரி
ஒன்றும் இல்லாததாகி உடையபோகிறது..
" ங்கோத்தா " யென
உன் வசையும் அங்கெழலாம்..

எஸ்..நோ..
நோ..எஸ்..
தொலைபேசியினொரு
பெயர் பதிவிடாத எண்,
டையல் செய்யவும் வேண்டாமுமென
யோசனைபட்டே தொலைபடுகிறது ..

மீண்டும்..
பிராந்திக்கும் ..
புகையிலைக்கும் ..
திரும்பி செல்கிறது
வாந்தியை நண்பனாக்கியிருக்கும்
குடிகார இரவு ,
போடா.. " ங்கோத்தா "
அவ இல்லாட்டி இன்னொருத்தியென
புலம்பியபடி..!

Thursday, December 17, 2009

கிளிவிடு தூது..


கூண்டுகிளியின் கதவு திறந்துவிட்டு
ஐய், கிளி..கிளீ.. பறந்துபோச்சென..
சிரித்து ஓடி ஆடுகின்ற
தன் மழலைபெண்ணின்
புன்னகையை இறுகபற்றி ,
படியிறங்கி செல்கின்ற கைம்பெண்ணினது
ஆதிஇரவின் இயலாமை
மௌனபட்டு துவங்கும்
இச்சிறுபொழுதினில் ,
தேடுகிறேன் நானும் ..
பாடுபொருளென்பதாதையும்,
கவிதையெனப்படுவதையும் .

Tuesday, December 15, 2009

பொய்யென பெய்யும் மழை..!




வார்த்தைகளுடைந்து
காட்சிகள் பெருத்து
காகிதகுடுவை தள்ள
குதிரை இலக்கின்றி ஆட ..

கோவண கிழவனின்
பெய்யாத மழைக்கென ,
மழலை சிறுமி..
உள்ளங்கை தாளம்..
முடிச்சியிட்டு முடியும்
மழை கவிதை
எங்கோ இப்பொழுதும் பெய்தோயலாம்..
வீங்கிய வானம்
தொங்கிய வயிறு
ஈசல் பிணங்கள்
அம்மணமாய் அங்கொழிந்துமிருக்கலாம்..
நமக்கென்ன..?
ஏனோ அச்செருகலில்
குடுவை .. குதிரை .. மனம்
முழுகவனமாய் ;
பின்..
பிழையின்றி ,
அந்திவானம் ..
மின்மினிபூச்சி ..
காமம் ..
இரவல் ..
தழுவல் .. நீள்கொடை விரிய...

கோவண கிழவனின்
பெய்யாத மழை
பெய்தே தீருவேனென
குதிரை - பேய்மழை பொய்ய,
அடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்
வாழ்வு ருசிப்பதாய்
தொலைந்திருந்தது
பூபோட்ட பாவாடை சிறுமியின்
மழை கனவு
என் இரவில்.


( இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதியது. )

Sunday, December 13, 2009

காதல் இறைத்துசென்ற இரயில்வண்டி..


இரயில்வண்டி தன் குழந்தைகளின் விருப்பபடி இரைச்சலை இசைந்து கொண்டிருந்தது. நேரம் மணி மதிய உணவிற்கு அப்புறமான 4.15 ஐ கடந்துவிட்டதாக சொல்லி அமர்ந்தான் அமுதன். தம்பி நான் மேல்படுக்கயில் படுத்து கொள்கிறேனென்று வசந்தியும் சென்றுவிட்டாள். எதிர்இருக்கையில் அற்புதா எந்த இசைவும் இன்றி தபூஷங்கரை காதலித்து கொண்டிருந்தாள். மெதுவாக, ஏங்க.. உங்களைதான்..அதென்புத்தகம், எங்...எங்க போறீங்க..? அற்புதா அரைமனதுடன் பொள்ளாச்சி..சுருக்கமாகவே முடித்துவிட்டாள். அமுதன் மறுபடியும், என்ன புத்தகம் என்றேனே என்றவாறு நெளிந்தான்.. ஓ.., புத்தகமா.. ம்.. எதை கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய்,வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், தபூஷங்கரின்.. சொல்லி முடிப்பதற்குள் அமுதன் கேட்க ஆரம்பித்தேவிட்டான்..

கொடுக்கல்..
வாங்கல்தான்.. காதல் ,
நீ முத்தம் கொடு
நான் வெட்கம் தருகிறேன்..!

என்னங்க, இப்போதான் பத்துநிமிடம் ஆச்சு, என்ன விளையாடுறீங்களா, அவள் நிஜமாகவே வெட்கத்தில் நனைந்துவிட்டாள். இவன் சிரித்துகொண்டே, அய்யய்யோ.., இது.. இதூ..நான் எழுதிய கவிதைங்க.. ஓ நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா..? நிஜமாகவே நல்லா இருக்குங்க.. ம்..,நன்றியென்ற சிறுபதிலுடன் பகிரதொடங்கினான்.., நான், எனக்கு.. மழலை, மலை,பனிபடர்ந்தஅதிகாலை,இரயில்பயணம்,ஜன்னலோர இருக்கை, அப்புறம்..அழகான இளம்பெண்கள்.. இப்படி ரசனையாக வாழ்பவன்.. கவிதையும், தமிழும் இருப்பதால்தான் நான் இன்னும் என்னை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் , மூச்சுவிடாமல் உணர்ச்சிகலந்த காதலுடன் பரிமாறி கொண்டிருந்தவனை இடைநிறுத்தி , தன் வாய்நிறைய.. ஆமா.., அமுதன் என்று அவன் பெயர்சொல்லி அற்புதா தன் சந்தேகங்களையும், படைப்பாளிகளுக்கு பாராட்டுகளையும் படரவிடதொடங்கினாள். கதைநாயகனும் தனக்கு தெரிந்த கவிதைமொழியில் புன்னகை நாயகியிடமிருந்து வெட்கங்களை பறித்துகொண்டிருந்தான். இடையிடையே இரயிலின்பின்னணிஇசையினையும் வழியவிட்டவண்ணம் இருந்தது அவர்களுடைய நீண்ட மாலைஉரையாடல். இதனிடையில் வசந்தி இன்பநிலவனுடன் காதல் பாடலொன்று முடித்துவிட்டு கீழிறங்கிவந்தாள். தம்பி முகம் கழுவி வந்துவிடுகிறேனென கழிவறைநோக்கி தொடர்ந்தாள். கவிதைகாதலர்கள் உறவு நீடித்திருந்தது ஒன்றும் அறியாதவர்கள்போல தாங்கள் விழிகளுக்குள். வசந்தியும் வந்தமர்ந்து கொண்டாள். சிறு இடைவெளிவிட்டு வசந்தியின் கைதொலைபேசி சிணுங்கியது . ம்..,ஆமாங்க இன்னும் ஒரு மணிநேரந்தான்.. ம் ,ம்ம்.., இறங்கியவுடன் அழைக்கிறேனென்று சப்தமில்லாத முத்தத்தோடு தொடர்பை துண்டித்தாள். வசந்தியின் விழிகள் புதிய அறிமுகங்களுக்கு இடையூற வேண்டாமென கதவுபக்கம் நிற்கிறேனென்றது , தம்பியும் வேகமாக தலையாட்டினான். ஏனோ அற்புதாவும் , அமுதனும் பிற்பொழுதினில் ஒருசில.. சிலசிறு.. புன்னகைகளோடே தங்களை சம்பந்தபடுத்திகொண்டனர்.. இன்னும் பத்துநிமிடங்களில் இரயில் தன் குழந்தைகளை மழைசாரலும், மலையடிவாரமும் நிறைந்த பொள்ளாச்சியினில் வழியனுப்ப தயாராகியது. அற்புதா தபூஷங்கரின் காதலை பைக்குள் திணித்துவிட்டு அமுதனிடமிருந்து எவ்வளுவு திருடி சேகரிக்கமுடியுமோ அவ்வளவும் பிடுங்கி தன் கன்னக்குழியில்ஒளித்து வைத்துகொண்டாள். எல்லோரும் பயணம்முடித்த களைப்பை துவக்கியிருந்தனர். அமுதன் காதல் முயற்சியில், அவளோடு இன்னும ஒருவாய்ப்பு..ஒருவார்த்தை.. காற்றினில் அலைபாய்ந்தவாறு இருந்தான்........... வசந்தியையும், அமுதனையும் கூட்டிக்கொண்டு அருகிலுள்ள தேநீர் கடைக்குள் நுழைந்தான் இன்பநிலவன். மெதுவாக கொஞ்சம் மெதுவாகவே வசந்தி துவங்கினாள்.. மாமா, உங்களைதான்..என்னங்க உங்களைதான், நம்மதம்பிக்கு காதல் வந்திருச்சு.. பொண்ணுகூட பார்த்துட்டான் போலதெரியுது.. மாமா அதட்டலாக அற்புதனை நோக்கி.என்னடா சொல்றா உங்க அக்கா.. அற்புதனும் ஆமா மாமா என்கிறதோனியில் தேநீர் பறக்கவிட்ட ஆவியோடு கவிதையொன்று வரைவதாய் இருந்தான் பேசதயங்கிக்கொண்டு..

அவளொரு பேரழகி..
ஆம் நிஜமாகவே அவளொரு அற்புதா..
நீ விட்டுசென்ற வெட்கங்கள் ..
என்னை தின்ன முனைகிறது..
ஒரு வாய்ப்பு..ஒரேயொரு வாய்ப்பு..
இரயில் பயணம்..இன்னும் ஒரேயொரு இரயில் பயணம்.......


அற்புதாவை பத்து நிமிடமென்று உட்காரவைத்த அதே தொடர்வண்டி கழகத்தின் காத்திருப்பு அறைக்கு விரைந்துசென்று அவள் முகவரியும் சம்மதமும் வாங்கி திரும்பியதை வசந்தியும், இனபநிலவனும் இரவு உணவின்போதுதான் மௌனம் கலைக்க தொடங்கினர்...

அமுதன் ஆச்சர்யத்துடன் ,

ற்பு...தா......... என பேரழகி கவிதையொன்றை தலையணையில் சிறு புன்னகையோடு கிறுக்க... மருமகன்

முகில் தன் மழலைமொழியுடன் மாமா..மாமா..என கட்டிக்கொண்டு, அம்மா சொல்லுது உனக்கு காதல் பைத்தியம் பிடிச்சிடுச்சாம், அப்படினா..அப்படினா... காதல்னா......என்ன மாமா..?

ஓராயிரம் காரணங்கள் நீட்டலாம்..


அன்பிற்கும் ..
காதலிற்கும் ..
நேர் நடுபுள்ளியில் இருவரும் ..
வாழ்தலுக்கும் பொறுப்பின்றி
சாதலுக்கும் பயனின்றி
எதற்கும் , யாருக்குமின்றி
இம்மழைக்கால அதிகாலையில்
எழுதாமலேயே விடைபெறுகிறது
ஓராயிரம் மௌனங்கள் .

Monday, December 7, 2009

இதொரு காதல் காலம்..!




காதலெனும் வன்ஆயுதம்
மூலப்பொருளாகி .. இதயம் பிடுங்கி
பாதங்களிலொட்டி சென்றவளை
பெருங்கடலென சீறும்
இரத்தம் தேடிதிரிய ..

நகமென வளருமேயெனயிருந்த புரிதல் ,
வடியும் இரத்தமினை
கண்களின் கீழே
உதடுகள் பருக.. வழியவிட்டவண்ணம்
தோற்றழுக ..

இயல்பாய் , பொருந்தா பிரிதொரு
இதயம் பொருத்தி
இயல்பை புறந்தள்ளி
காலி உடம்பினில்
உயிர் சொருக
பக்குவபடாது ..
பாடலொன்றும் , பாடமென்றும் ..
முயன்று முடியாது ..
காதல் வலிக்க
வாழ்வு தேடிதிரும்பும் இப்பெரும்பொழுதினில் ..

காதல் பிரளயமாகி
பெருங்கடலென சீறும் இரத்தம்
அவளும் அடையாது ..
மடிந்திருப்பாளென்றே நம்புகிறேன் .!

Thursday, December 3, 2009

வாழ்தல் பத்திரபடுத்தபட்டது..


தொலைந்த முத்தங்களில்
மிச்சப்பட்டது , உன்னின் பேரன்பில் ..
நீ சொல்லாமல் டைத்தெறிந்த
உனது முதல் மௌனகவிதை .

வாய்ப்பாடு..


குடி குடித்தலிலிருந்து ..
வாழ்தலையே எரித்துவிடும்
கொஞ்சமாவது பயப்படு .

முதல்முறை என் காதலிக்கு..




மனசு மரத்து மரத்து
மீண்டும் மீண்டும் நீள்கிறது
இவ்விம்மும் இரவின் ,
எங்களது மிகநீண்ட ..
காதல் ரையாடல் .

அது..


காதல் பெண் ..
காமம் ஆண் ..
விதண்டாவாதம் அது .

உனக்கு மட்டுமொரு ரகசியம்..


நீ நீயாக இரு ..
நான் நானாக பருகுகிறேன் ,
வாய்ப்பேயில்லை ..
இந்த ஜென்மத்தில் பிரிவு .

விதி..


ஓர் மௌனம் ..
ஓர் டைத்தல் ..
பன்மடங்கு காதல் ..
எழுத தவிப்பது ,
தோற்றெரியும் காதல் .

இவ்விரவின் முடிவுகள் ..


தனிமை எரிந்த அரபுமண் ..
முத்தங்கள் தீர்ந்த புகைப்படங்கள் ..
காதல் பிரயாசித்த தொலைபேசி ..
இயலாமை பரியாசித்த சாராயவாடை ..
இறையாண்மை புகழ்ந்த நான்..
ஆமோதித்தால் நீ மனிதன் ,
இல்லையென்றால் நான்.....
நான் , கவிஞன் .

சிறு புன்னகை செய்..


வித்தியாசம் பருகிவிட்டு
தள்ளாடுகிறது ,
காதலும் காமமும் ..
எதற்கும் நீ ,
தொலைவிலிருந்தே தொடர்புகொள் .

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2288

நன்றி: உயிர்மை ..

நூலுடைந்து சாகுமுன்..


இருவருக்கும் இடையில்
மில்லி இடைவெளி ..
இனியென்ன வேண்டும் ,
விடைபட்டு சாக ..
நாமென்ற நமக்கு .

இது நான்..


பேரன்பு ,
வன்முறைகளுக்கு ஆதியானால் ..
என்னை நான் வகைபடுத்துவேன்
தீவிரவாதம் என்னிலிருந்து
ஆதி .

Tuesday, December 1, 2009

வாழ்தல் முறித்த இரவு..




நிலவு உயிர்பெறும் ,
காதல் உந்தப்படும் ;
காமம் செத்தே பிறக்கும்...
முன்பொரு ,
சூரியன் மரித்த மாலையில்
அவள் அழுத கவிதை
இன்னுமென் நாவினில்..

எதற்காய்..
எனும் வினா எழுப்பபடும் ,
காதல் மற்றும் காமம்
விடைசொல்லி உறங்கியிருக்கும்
இது நடுசாமம்..!

காதல் , காமத்தின்
புரிதலற்ற வடிவத்தில்
எச்சில் படுதலாகி எரிவதால்..
இந்த..நானெனும் சுயம்
தொலைந்திருக்கும் பட்சத்தில்
அவள்..அவளாய்தான்
ஆதியாகி அந்தப்பட்டிருப்பாள் .,

போதை இரவினில்
எதற்காகவோ மிச்சப்பட்டது ,
கவிதை வாடையும் ..
காடெறியும் கனவுகளும்..
எனக்கே எனக்கென .