Wednesday, August 5, 2009

என்வீடு வந்து போனாய்...


என்னைதவிர யாரையும் அமரவிடுவதில்லை
செல்ல சண்டையிடுகின்றன
நீ அமர்ந்துபோன இருக்கைகள் !


என் வீட்டு தேனிர்குவளை
வேறெதுவும் பருக மறுக்கிறது
உன் உதடுகளை சுவைத்ததிலிருந்து !


குளியலறை கண்ணாடிக்கு
காய்ச்சல் வந்துவிட்டது
ஓ... நீ முகம்கழுவினாயோ !


அழகுதிமிர் சிதைந்து
வெட்கத்தில் தலைகுனிகிற
மொட்டைமாடி ரோஜாக்கள் !


நீ மறக்காமல் மறந்துபோன
கைக்குட்டை...பத்திரமாக
உடுத்திக்கொண்டது
என் காதல்குழந்தை !


டேய் என்னடா
யார்ருடா அந்த பொண்ணு
தங்கையின் சீண்டல்
அறிந்து கொண்டேன்
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு !


இந்நிலை நாட்கள்
உனது நிழல்களை
உற்று பார்
அச்சப்படாதே
அது நான்... நானேதான் !


வெளிவர அடம்பிடிக்கின்றன
கவிதைகளெல்லாம்
காதல் குளத்தில்
முங்கிகொண்டு !!

2 comments:

Thoughts said...

try to post in tamilish.com and if you have time visit http://thoughtsofdeepak.blogspot.com/

Unknown said...

mm.. ok.. thanks..