Monday, August 3, 2009

மனைவியே காதலியாவாள்...


அதிகாலை பூக்கள்
பனித்துளி ரசிக்க
கைப்பிடித்து நடப்போம்..

வீதிகளில்
குழந்தைகள் கண்டால்
குழந்தைகள் ஆவோம்..

ஓர் நொடிக்கும்
உயிர் கொடுப்போம்

குட்டி குட்டி புன்னகைகளையும்
சேமித்து வைப்போம்..

சின்ன சின்ன பரிசுகளையும்
அலங்கரித்து வைப்போம்..

உலகையே வாங்கிவிட்டதாய்
கர்வம் கொள்வோம்..

பெண்மை பேச நானும்
ஆண்மை பேச நீயும்
செல்ல சண்டைகளிடுவோம்..

மெத்தை வெட்கப்படும் தருணம்
நாம் கசிந்து போவோம்..

வெளிச்சத்தை இருள் கொல்லும்
தேடல்கள் தொடர்ந்து செல்லும்..

எந்தன் கனவுகள் நிறைக்க
எப்போது வருவாயோ ?!

No comments: