Thursday, October 29, 2009

மழை இரவினில்..


ஓர்ஒப்பற்ற மழைமேக காலத்தில்
போர்வையினுள் முழுவதுமாய் அமிழ்ந்துகொண்டு
சலனமற்று உறங்கிபோனவனின்
நிமிடங்களை காதலால் கட்டிகொள்ள
தன் செல்லநாய்குட்டியோடு ஓடிவருபவள்
ஒருசில முத்தங்களோடு துவங்கினாள்..

பின்னெனயும் கூட்டிகொண்டு
பட்டாம்பூச்சி பிடித்துவர
சாலையெங்கும் வண்ணமாக்குகிறாள்..

தேவதையின் விருப்பத்திற்கிணங்க
நெடுநேரம் மழையோடு
மழலையாகி கலைந்தேன் நானும் ;

மழை சற்று தூறலை
குறைத்தே வழியதொடங்கிய அந்நேரம்
என்னை மறந்தவளாய்
அவள் ஆசைப்பட்ட பட்டாம்பூச்சிக்கும்
செல்ல நாய்குட்டிக்கும்
கவிதை சொல்ல பழகுகிறாள்..
நானும் மறுதலித்தலின்றி
என் மகளை ரசித்தவாறு
தீர்த்தேன் அன்றைய இரவினை..!

Sunday, October 25, 2009

அரேபிய ராசாக்கள் V11

தீபாவளி புத்தாண்டு திருநாட்கள்
ஜனிக்கும் தருணங்களில்
அனைத்து உறவுகளிருந்தும்
அனாதையாக்கபட்டிருக்கின்றோம் ,
அன்பெனவும் அரவணைப்பெனவும்
அறிய..அறிந்துகொள்ளபடுபவனயாவும்
ஏதோவொரு மூலையில்
சிறுகிழிசலுடன் மனம்
வழியவிட்டு கொண்டிருக்கிறதென
வலிகொண்டு வாழும்
ஆத்மாக்களில் இன்னும் ஒருவன்.

Wednesday, October 21, 2009

அணைக்கப்படா விளக்குகள்..

ஆதிக்கம் ஒய்யாரமாய்
உச்சந்தலையில் ஏறிநின்று
உந்தி தள்ள
அதன்விசையில் நானும்...
நான் ஆண்..?

அவள் சேலை களையும்
முனைப்பில் மனம் அலைய
அவசர்ரம்.. பொறுடா நாயே
அதட்டுகிறாள்..
எதிர்ப்பேயில்லை என்னிடம்
நான் ஆண்..?

எங்கடா அது
கால்சட்டைபை முட்டி
தலைதொங்கி
மெதுவாய் பல்லிழிக்குது ஆணுறை
அய்ய்யே நீ ஆண்
இது அவள்..!

காமம் குப்புற கவிழ
ஆடையை போர்த்தி
கலைந்த மயிர்களை
ஒழுங்குபடுத்துகையில்
சீப்பின் பல்லில்
ஆதிக்கம் மட்டும் கிழிபடாமல்..
அறையை வேகவேகமாய் கடக்கிறேன்...

கனத்த சப்தம்
அறை முழுவதும்
ஒலிக்க துவங்குகிறது
டேய் நாளைக்கும் வருவியா
பாப்பாக்கு இஸ்கூல்பீஸ் கட்டணுமாம்............

Thursday, October 15, 2009

மதமும் மனிதமும்..

முதல்வகுப்பு தொடங்கியே
மதத்தினில் எங்கே மனிதமென
நானும் என் தங்கையும் ;

இயலாமையினொரு..
கடைசி தருவாயில்
புரிந்தோ புரியாமலோ
நிரப்பி தீர்த்தோம் ,
நியதிகளொன்றுமில்லை
சாதிகளில்லையடி பாப்பா
கற்றுகொடுத்த குருவும்
மதம் தின்று
மனிதம் கொன்றே
நெய்கின்றான் உயிரினை ,
அட மடையா..
நீயோ , நானோ எம்மாத்திரமடா ..?

Thursday, October 8, 2009

மரண குறிப்பு...

















பனித்துளியும் குயில்களும்
பாலையும் பூக்களும்
புதிய பாஷையொன்று கற்க;
கூப்பிடும் தூரத்திலே நான்..

உங்களில் நான் வாழ
எழுதுகோல் முனைமழுங்க வாய்ப்பில்லை
எனதுநேரம் முற்றும்.

இன்று நான்
நாளை நீ
மரணம் என்றும்..

பயமில்லை வருத்தம்தான்
நாளை என் நண்பர்களுக்கும்
மரணம் தன் வாசல்திறக்கும்..

பாதைகள் நீளமே ;
நிறுத்தங்களில்..
பயணிகள்தான் .

கடைசி ஆசை..
பின்னொருநாள்,
வானமுகட்டிலிருந்து துப்புவேன்
எழுத்துக்கள் தாமாகவே
பெயர்க்கவேண்டும் கவிதையாக..

என் பிள்ளைக்கும்
பாட்டிக்கும் முன்னரே
ஜென்மஆராய்ச்சி செய்ய
அழைக்கிறான் கடவுள்..

மரணத்திற்கான கேள்விகளில்
இழப்புகளுக்கான பதில்கள்
வாய்ப்பில்லை கிடைக்கபெற..

தனது பிச்சையில்
திருப்தியற்றதாய் எதுவும் ;
கடவுள் கேட்டால்
காதலும் காமமும் என்பேன்
பூலோகம் செல்
நீயும் முயற்சி செய்
நகையும் செய்யலாமென யோசித்திருக்கிறேன்..

எதற்கும் உபயோகமில்லை
இனி இருந்தெதற்கு நான்..
கடைசியாயொரு கிறுக்கல்
கடவுள் நிச்சயம் பைத்தியகாரனே..

வழக்கம் போல்
கண்கள் மூடிக்கொள்ளும்
திறக்கபோவதில்லை .