Monday, August 3, 2009

அவள் - கவிதை ...


தேவதைகளெல்லாம் கோபமாக
உன் வீடுநோக்கி போகின்றன
என்னவென்றா கேட்கிறாய்
எல்லாம் பொறாமைதான்
செய்து பின் உயிர்கொடுத்தானோ
உன் அப்பன் உன்னை !!

என்னருகில் வா
நானும் கொஞ்சம் அழகாகிகொள்கிறேன் !!

நனைந்தது போதும்
குடை பிடித்துகொள்
மழை வெட்கபடுகிறது பார் !!

இத்தனை பாவனைகளை
எங்கிருந்து பிடிக்கிறாய்
எனக்கும் ரகசியம் சொல்லிகொடேன் !!

வரும்போதே
கொஞ்சம் மௌனத்தையும்
நிறைய வெட்கத்தையும்
எடுத்து வந்துவிடுவாயோ !!

சற்றுநேரம் அப்படியே இரு
கவிதை எழுதி கொள்கிறேன் ... !!

No comments: