Monday, November 23, 2009
தொலைத்த முத்தங்கள்..
என்றுமே..
என் முதல் கவிதையும்
கடைசி கவிதையும்
உன் முத்தமாகதான் இருக்கணும்..!
இன்னும்..
கேட்கப்படாமல் தவிர்ப்பதும்
கொடுக்கப்படாமல் நகர்வதும்
முத்தத்திற்கு மட்டுமே தெரிந்த
ரகசியமாக இருக்ககூடும்..!
கவிதை புத்தகம் நிறைய
உன் முத்தங்கள் ;
முதல் முத்தம் மட்டும்
கவிதையாக..!
ம.. உன் விருப்பம்போல்
நீ முத்தம் தொடரு ..
நான் கவிதை தொடர்கிறேன்..!
நானும் நீயும் எங்கே ..?
காதலும் முத்தங்களும்
திருவிழா எடுக்கிறது
தமிழ் கவிதைகளுக்கு..!
எந்தன் கூச்சகாய்ச்சல்
உந்தன் முத்தங்கள்முன்
தோற்றேபோகிறது..!
நீ வருகிறாய் என்றவுடன்
வெட்கத்தின் வளைவுகளில்
என் உதடுகளும் ,
முத்தங்களும்..!
உன் முத்தங்கள்முன்
என்றுமே என்காதல்
சிறு குழந்தைதான்..!
நீயென்னை முத்தமிட
இருநொடி முன்பே
விழிகளுக்குள் ஒளிந்துகொண்டு..
எத்தனை நாகரீகமரிந்த காதல்..!
முத்தங்களில்..
வரவு எதற்கு ;
செலவு போதும்..!
இன்னும் வாழ்கிறது
ஞாபகமுத்தங்களில்..
நீ தரஇயலாத
அந்த முதல்முத்தம்..!
உன் முத்தத்தை நேசிக்க ,
மிகநீண்ட வரிசையில்..
என் முகபருக்களனைத்தும்..!
அவசரம் எதற்கு..
பொறுமையாக கூட்டிக்கொண்டேவா ,
வெட்கத்தின் வளைவுகளில்
பூத்திருக்கும் முத்தங்களையும்..!
என் மௌனங்களனைத்தும்
நொறுங்கி எழுகிறது..
உன் முத்தங்களின் புன்னகையில்..!
பிழையாயிருந்த எனதுயிர்
தப்பி பிளைக்கிறது
நீதரும் முத்தங்கள்முன்..!
என் காதல்
அர்த்த செறிவுடையதாகிறது
உன் முத்தங்களுக்கு
கோடி நன்றிகள்..!
என் வாழ்வியலை
சாதலில் ,
உன் முத்தம்தான்
நிரப்புகிறது..!
தொலைத்த முத்தங்கள்..
உனக்கான காத்திருப்புகளில் ,
தேடி கொடு..!
எழுதிய முத்தங்கள் நூறு
இருத்தல் அமைந்தாலும்
எழுதாத முத்தங்களில்..
நீ..இன்றுமென்ற
ஒரே வருத்தம்தான்
என் உறக்கம் தொலைக்கின்றது..!
துவங்கும் பொழுதினிலேயே
முடிந்தும் விடுகிறது
என் கவிதைகளனைத்தும்
உன் முத்தங்களின்முன்..!
நான் தவறவிட்ட முத்தங்களை
இன்னும் உன் ,
கன்னக்குழியில் தானே..
ஒளித்துவைத்திருக்கிறாய்..!
Saturday, November 14, 2009
என் மனைவியின் திருமணம்..!
தேவமகளின் ஆசியுடன்
பெண் வேடமேற்று..
அமைதி புருவங்களுடன்
அழகாய் ஏந்தியிருந்தாள்
வெட்க புன்னகை..!
மருதாணி சிவந்திருந்த உள்ளங்கை
ஓசையின்றி கவியெழுதியவாறு
தொடர்ந்திருந்தது..!
நெற்றியோடு நெளிந்திருந்த சுட்டி
வாழ்த்தும் மலர்களிடிம்
அவளை வாசிக்க, நெகிழ்ந்தது..!
தேங்கிய காதல்
தாங்கிய காமம்
வாசம் நுகர்ந்ததாயிருந்தது
நீலநிற பட்டினது..!
சற்றே சலனமின்றி
நிறமறியா பயமாய்
இலேசாய் வியர்த்திருந்தாள்
இந்த வேடிக்கைபொம்மையை
கண்ட கணம்..!
ஐயரவரின் மந்திரம்
தீர்வதாயிருந்தது..
அந்நேரம்..தாலி
மந்திரம் துவக்கியது
கணாளன் மணவாளனுக்குபோக
இனி நான் மீதியென..!
பெண் வேடமேற்று..
அமைதி புருவங்களுடன்
அழகாய் ஏந்தியிருந்தாள்
வெட்க புன்னகை..!
மருதாணி சிவந்திருந்த உள்ளங்கை
ஓசையின்றி கவியெழுதியவாறு
தொடர்ந்திருந்தது..!
நெற்றியோடு நெளிந்திருந்த சுட்டி
வாழ்த்தும் மலர்களிடிம்
அவளை வாசிக்க, நெகிழ்ந்தது..!
தேங்கிய காதல்
தாங்கிய காமம்
வாசம் நுகர்ந்ததாயிருந்தது
நீலநிற பட்டினது..!
சற்றே சலனமின்றி
நிறமறியா பயமாய்
இலேசாய் வியர்த்திருந்தாள்
இந்த வேடிக்கைபொம்மையை
கண்ட கணம்..!
ஐயரவரின் மந்திரம்
தீர்வதாயிருந்தது..
அந்நேரம்..தாலி
மந்திரம் துவக்கியது
கணாளன் மணவாளனுக்குபோக
இனி நான் மீதியென..!
Thursday, November 12, 2009
புத்தன் வெட்டிய போதிமரம்..!
என் என்னை
மறந்தவள் ..
மறந்ததாய்யெறிந்தவள் ..
காதலென தீர்வதும்
காமமென துவங்குவதும்
தொடர்ந்திருப்பாள் இந்நொடி ..
என்னிடம் விட்டதிலிருந்து ,
விடுபட்டதிலிருந்து ...
காமம்சொரியும் காம்புகளாய்..
கற்றது ;
அவளாகியவள் கற்பித்ததாலறிந்தது ,
பெண்ணெனப்படும் அவள்
புனித பால்சுரப்பிகளாய்
மாறியிருக்கலாம் ;
இல்லையாகியிருந்தால்
பெண்மையாக்கி..
மாற்றம் கண்டிருக்கலாம்...
வாழ்தல் வாழ்தலென்பதறிய
ஆயுதமாகி..
ஆய்த்தமானவனாகிறேன் ;
பௌத்தனென
அறிந்தறியப்பட்டவனாகிய நான்..
நானெனும் சுயம் இழக்கிறான்...
புழு நக்கிய
மீதிபுண் சீள்
உந்த ; உந்துதலாகிறான்
விடுபட்ட காதலும்
விட்ட காமமும் தேடலாகி,
அவளெனப்படும் இன்னொருவளை
தொடர்கிறான்...
Tuesday, November 3, 2009
கற்பனை காதலிக்கு..2
அவளுக்கு நடனம்..
எனக்கு அவள்..
மௌனமாய் காதல் !!
இம்முறை நான் ஆண் ,
அடுத்தமுறையும் நான் ஆணாகதான்..
நீ பெண்ணாகவே வாழ் ; சாகாதே !!
காதலிச்சா கவிதை வருமாம்
வா , பெண்ணே...
ஒருமுறை முயன்று பார்ப்போம் !!
கூச்சமென்று சொல்லி
காதல் தவிர்க்காதே ,
என்னிடமும் கொட்டிகிடக்குது..
பூந்தொட்டி நிறைய கூச்சம் !!
இரவும் விடியலும் கூடுது
நான் மட்டும் அறியாது
தொடருது இந்த வாழ்வு..!!
என்னைபோலவே ..
நீயும் என்னை
தாராளமாய் காதலிக்கலாம் !!
அவள் வெட்கங்கள்
நிர்வாணமாய் நிற்க
அறிவிப்பாகிறது ..
இது காதல்தானென !!
பின்புறமாய் வந்து
கண்களை மூடுகிறாள் ;
கண்டிப்பாய் ..
இது அவள்தான் !!
நான் ராட்சசனாகி
அவள் தேவதையாகி
விருப்பங்களெல்லாம் ஒருபுள்ளியிலாகி
வளர்கிறது காதல் !!
நாளுக்கு ஒரு முறையேனும்
என்னை இறுக்கமாய் கட்டிக்கொள்
நானும் கொஞ்சமாவது
அழகாகி வாழ்கிறேன் !!
வேடிக்கையாய் ஊடல்கள்
சிறகு விரிக்க
காதல் மழலைமொழியாகிறது !!
விரல்களின் தழுவலோடு
முத்தங்கள் துவங்கும் பொழுதினில்
மூச்சுவிடுகிறது காதல் !!
தன் பெண்மை
சிலாகிக்கும் தருணம்
ஆண்மை குறுநகையுடன்
அவளை கட்டிக்கொள்கிறது..!!
ஒவ்வொருமுறை
நம்சந்திப்பின் பிற்பொழுது
கண்ணாடி கைகுலுக்குகிறது ..
நானும் அழகாகி வருகிறேனாம் !!
மழைநின்ற வானம்
முன்னைவிட அழகு ;
கைகள்கோர்த்து வெட்கத்தில் காதல் !!
மாலையிலொறு விடைதருகிறாள் , பார்க்கலாம்..
மறுநாளுக்காக இன்றே தேடுகிறேன்
எங்கே நானென !!
கவிதையென்று ; காதலுக்கு தர
விழிமூடி யோசித்திருந்தேன் ..
கவிதை முடித்துசெல்கிறாள் ,
இலேசாய் உதடுகளிட்டு
காதுகளில் ரகசியமொன்று..!!
எழுத்துகளை கோர்வைபடுத்த
படாதபாடுபடுகிறேன் ;
என் காதலைபோலவே !!
கவிதையின் மிச்சமாகியோ
இரவின் எச்சமாகியோ
இனியும் உறங்காமல் காதல் !!
அவளொரு நடனக்காரி
நானொரு கவிதைபொய்யன்
இவ்விரண்டு வரிகளினில்
மழலை புன்னகையாய் தவழ்கிறது
இப்போதைக்கு காதல்.!!
என் கற்பனை காதலிக்கு தமிழ்வாசிக்க தெரியுமேயானால் ஒருவேளை அவளும் வெட்கம் கொள்வாளோ என்னை போல..!
Sunday, November 1, 2009
காதலாகி.. உயிராகி.. பின்..,
ஜன்னலோர பிள்ளையினை
தொடரும் நீண்டபுன்னகையாய்
காதல் எங்கள் தோளேறி
உலகே பொறாமைகொண்டோட
பிரயாணிக்கின்றோம்..
யாருமற்ற இரவொன்றில்
கன்னத்தில் பதியென்றால்
முதுகினில் முலையழுந்த
பின்னங்கழுத்தினில் நதியினைபோல்
முத்தங்களோடு தலைகோதுகின்றாள்..
வழக்கிற்கெதிராக
என்மடியினில் அவள் தலைசாய
நெடுநேரம் தொலைய
காதலுக்கு காய்ச்சல்..!
நட்சத்திரங்கள் வெட்கத்தில்
பால்நிலவும் பங்கிட்டுக்கொள்ள
வானம் சிவக்கின்றது..
மறுநாள்
எங்களின் முன்பே
காத்திருந்த காதல்
தேடியோடி..
தேடியோடி.. இன்று
ஒருகிழவன் .. ஒருகிழவி
முன்பைவிட காதல்
கூடுதலாகியே தீர்கிறது நாட்கள்..
Subscribe to:
Posts (Atom)