Monday, August 31, 2009

தேடல்..


முன்பொருநாள்
புகையிலையில் தொடங்கிய
நமக்கிடையேயான முரண்பாடு
பிற்பாடு நீ
பிரிவிற்கு என்னவெல்லாம்
காரணங்களறிய முயற்சிப்பாயோவென
பயந்தே தவிர்க்கிறேன்
நமக்கான சந்திப்புகளை..

சிறுபிள்ளை காலத்தில்
முற்றத்தில் மலம் கழித்தேனென
பாட்டி அடித்தது ..
அம்மா மார்களில் சாய்ந்து
அப்பாவிடம் கதை கேட்டது ..
எதிர்வீட்டு அக்கா கைபிடித்து
பள்ளிக்கு போனது ..
பக்கத்து வகுப்பு தேவியிடம்
இனகவர்ச்சியை காதலென புரிந்து
கணக்கு ஆசிரியரிடம் கொட்டுவாங்கியது ..
.............................................
இங்ஞனம் நீண்டுகொண்டே
நீயின்றி போன
என் எல்லா நிமிடங்களும்
என்னிடம் பொக்கிஷமாக ...

நினைவுகள் பொறுமையின்றி
நான் நீயென முண்டியடிக்கிறது
முன்னேறி வர...

எனையும்
எனைசேர்ந்த எல்லாமும்
என்னை தேட
நானோ...
விடுபட்டுபோன காதலையும்
விடைபெற்றுபோன உன்னையும்
கவிதைகளில் தேடிகொண்டிருக்கிறேன் !!

Saturday, August 22, 2009

கற்பனை காதலிக்கு 1

















கனவுகள் தின்றதுபோக
எஞ்சிய மிச்சஉயிர்
காய்ந்து படிந்திருக்கும்
கவிதைகளில் ...

சாகுமுன் வாய்ப்பு கிடைத்தால்
என் இதயம் பிடுங்கி
காதல்பரிசு தருகிறேன் ...

எனை தின்ற கனவும்
கனவை தின்ற கவிதையும்
என்னையும்
என் காதலையும்
முழுமையாய் உன்னிடம் சரணடைக்கும் ...

அநேரம் நீ
மலைத்து பேந்த விழிக்காமல்
புன்னகை செய்
இறுக்க கட்டிபிடி
முத்தங்கள் விட்டுகோடு
மெதுவாய் தலைகோது
விரல்களில் சொடெக்கெடு
உயிரோசை கேள் ...

காதல் களைப்பில்
உன் மடிசாய்ந்து
கண்சொக்கும் நேரம்
காதோரம் செல்லகடி கடி ...

பின் இருவரும்
கைகோர்த்துகொண்டு
தொலைதூரம்
நடக்க துவங்கலாம் .................

Wednesday, August 19, 2009

எச்சில் சமுதாயம் ..


காலி மதுகோப்பை
காலியாகவே நிரப்பபட
புரையேறிய பொழுதினில்
எழுதி தீர்த்துவிடுவதென ..

காதல்
வரம்..? சாபம்..?
நோண்டி நொண்டியடித்து
சாலையோரம் திரிந்தவனிடம்
குப்பைகளை
கண் , காது.. கபாலம்வரை
காயப்படுத்தி திணித்தனர்
பொதுவிட காதல்வாதிகள் ..

மாலை ஒழிய
தலையணையில் தலைசாய்க்க
எதிர்வீட்டு முதிர்கன்னி
ஞாபகத்தில் எழுந்தழ
காதலாவது , கத்திரிக்கையாவது ..

கண்களை இறுக்கி
மூட முயற்சிக்கையில்
வரதட்சணையும் விவாகமும்
புழுக்களாய் நெளிய
சரி, மூத்திரம் களைந்து
மீண்டும் முயற்சிப்போமென
கழிவறையை தாழிட்டால்
வெள்ளை பிசுபிசுப்பிற்கே
எத்தனிக்கிறேன் என்னை ..

எழுதவே கூடாதென்றிருந்த கவிதை
கடைசியில் கழிவுகள் துப்பி
எச்சிலில் நனைய ;
நானும் சாதாரணன்
என்னையும் சேர்த்தே
இச்சமுதாயம் .

Monday, August 17, 2009

கடற்கரையோர முத்தங்கள்..

மலம் கழித்து
மூத்திரம் தெளித்து
அதில் விரல்களிட்டு
வண்ணமென்று கத்தி
படம் வரைகிறார்கள் !!

வாய்பிளந்துகொண்டு
வேடிக்கை காண
என்பின்னால் நீயும்
உன்பின்னால் நானும் !!

சாக்கடை கொசுவில்
மலம் மொய்க்கும் ஈயில்
நாறும் அட்டைபூச்சியில்
உயிர்திசுக்கள் பொறுக்கி
இவர்களை செய்திருப்பானோ சாத்தான்
சர்சைபடுத்துவதாயானால்
மானம் கெடும் காதல் !!

சந்தேகங்கள் நிறைவுற
புள்ளியிட்டு தீர்க்க
ஒருமுழம் கயிறும்
ஆறடி குழியும்
அவசியப்படலாம் !!

யோசனைகளிலேயே
மூச்சுமுட்ட
கழுத்தறுந்து விழ
காதல் சாக
சீய்ய்.... போங்கப்பா .

Sunday, August 16, 2009

கற்பனை காதலிக்கு ...




காதலே..
காதலிக்க ஆசையா உனக்கு
கொஞ்சம் கண்ணை திற
என் காதலி வீதிவருகிறாள்...

அன்பின் ஆதாரங்கள்
நம்மிலிருந்து தொடங்கட்டும்
நானும் நீயும் காதல்செய்வோம் வா...

நான் நீ காதல்
மூவரும் இணைந்து விடுவோம்
திருவிழா இனி தினமும் தொடங்கட்டும்...

அட என்ன இது
ஊரிலுள்ள பெண்களெல்லாம்
உன் வீட்டு வாசலில்
ஓ..வெட்கம் வாங்க வந்தார்களாம்...

ஊரே வேடிக்கை பார்க்கபோகிறது
சாமி கண் திறக்கிறாராம்
நேற்று நீ கோவில் போனாய் என்பதை
உடனே எல்லோருக்கும் சொல்லியாகவேண்டும்...

பூக்களுக்குள் சண்டை மூட்டாதே
இனி நானே கொண்டுவருகிறேன்
உனக்கான பூக்களை ...

அட... உணர்ச்சிவசப்பட்டு
ஆணிகளை உதைத்துவிட்டு
உன் முகம் காண
கண்ணாடி கீழிறங்கி வருவதை பார்!!

சிறுபிள்ளைகள் போல்
அடம்பிடிக்கும் மருதாணிஇலைகளை பார்
தினமும் மாலைவேளையானால்
உன் உள்ளங்கை வேண்டுமாம்!!

இந்த நடனத்தை பார்
தேம்பி தேம்பி அழுவதை
உன் கால்கள் வேண்டுமாம்
வாழ்நாள் கடனாக!!

காற்றும் ஆசைப்படுகிறதோ
உன்னை காதலிக்க
எவ்வளவு அழகாய்
சண்டைபோடுகிறது துப்பட்டாவோடு!!

தீரதீர நான் தருகிறேன்
அடிக்கடி முத்தம் கொடுத்துகொள்
சின்ன குழந்தைகளுக்கு ...

தேவதைகள் மஞ்சள், சிவப்பு ..
வண்ண ஆடைகளும் உடுத்துமென்பது
உன்னை பார்த்தபின் தெரிந்து கொண்டேன் ..

ஒருமுறை நீ நனைந்தாய்
இப்பவும் மூடப்படாத ஜன்னல்கதவுகள்
மறுபடி மழை எப்போவரும் !!

தேவதை சிறகுகள் விற்பனைக்கு
என்ன வேடிக்கை பார்கிறாய்
அது நீ கிழித்துபோட்ட மிட்டாய்தாள்கள்தான் ..

இன்னும் ஒரேயொரு வாய்ப்புகொடு
நானும் பழகிகொள்கிறேன்
நகம் கடிக்க ..

உன் புருவங்களை காட்டிவிட்டுபோ
இங்கே பிறைநிலா காண
பயங்கர கூட்டம் ..

உனக்கெழுதிய கடிதங்களெல்லாம்
முதிர்கன்னிகளாக எனது பெட்டியில்
என்று மௌனம் கலைக்கபோகிறாய் !!

நான் ஆண்
நீ பெண்
வேறென்ன வேண்டும் காதலிக்க ??

வெட்கத்தின் வெப்பம்
மௌனம் உடைத்து
முத்தமாய் விழும்
காதலின் அடியாளமென ..

காமத்தின் பெருமை
பெருகுமோ ?
நம் காதலின்
உதவியால்!!

நான் பாதை
நீ பாதம்
உணர்வதில்லை காதல்
விதி வலி...

நான் எழுதுகிறேன்
நீ படிக்கிறாய்
காதல் ரசிக்கிறது ..

வார்த்தைகள் நீ
எழுதியது நான்
பரிசு கவிதைக்கு ..

காதல்
உனது அசிர்வதிக்கப்பட்டது
எனது சபிக்கப்பட்டது
மறைமுக தூதுவனாய் நான்!

Saturday, August 15, 2009

...................

காதல் தருணங்களில்
களைப்பாற அமர்ந்துபேசிய
மர தரைகளில்
இன்னும் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதானிருக்கின்றன
உன்னையும், உன்
புது- காதலையும்
ஆசிர்வதிக்க !!

கள்ள நோட்டு


இரைச்சலுடன் இருட்டறை
கூச்சப்படாமல் கருப்புமனிதர்கள்
இயங்கி கொண்டிருக்கிறார்கள்
சிவப்புபெண்களைவிட கேவலமாக
அதுதெரியாமல் அங்கே
வெள்ளை புன்னகையுடன் "மகாத்மா"

Thursday, August 13, 2009

மௌனம்...


பொல்லாத காதல்
மெல்லிய மௌனம்
வன்மையாக கண்டிக்கிறான்
காதல் கடவுள் !!


காதலின் வேதனை
மதம் பிடித்த
மௌன உரையாடல்கள்
உணராதோ நாம் வாழும்வரை !!

"கவிதை"


நீயோ
அவளோ
அணுகாத
அனுபவிக்காத
"காதல்"
என்னிடத்தில் ஏராளமாய்
இப்படிக்கு
காதல் கவிதைகள் !!

Tuesday, August 11, 2009

அரேபிய ராசாக்கள் V


ஒரு ரியால் கூல்டிரிங்
இரண்டு ரியால் சாக்லேட்
கொஞ்சம் வாழ்த்துக்கள்
அப்பாவான சந்தோஷம்
அடங்கிபோய்டுமா நண்பனுக்கு ..

இப்போ லீவ் இல்லையாம்
இன்னும் மூணுமாசத்ல வராராம்
போட்டோ எப்படியாவது அனுப்பசொன்னார்
மனைவி எடுத்து சொல்கிறாள்
மற்ற சொந்தங்களிடம் ..

ஒற்றையாய் ஆராரோ பாடும்
அவள் அழுகையின் சப்தம்
இங்கே இவன் தூக்கத்தில்
வெடிக்கும் வார்த்தைகள்
வழியும் கண்ணீரை வந்தடைய
எதைசொல்லி ஆறுதல்படுத்த
ஆளாளுக்கு ஒருயோசனையுடன் ..

தங்கச்சி திருமணம்
நண்பனது மரணம்
தாராளமாய் ரணங்கள்.......................
கிடப்பில் கிடக்கின்றன
இங்குள்ள எல்லோர்க்கும் ..

"அரேபிய ராசாக்கள்
அருவருக்கதக்க தியாகிகள்" .


புகையிலையில் தொங்கிய கவிதை..

பாடுபொருளொன்றும் தட்டுபடாது
கண்ணயர்ந்தபோது
விரல்களிடுக்கில் செந்நிறத்தில்
எரிந்துகொண்டிருந்த புகையிலை
கக்கிகொண்ட சாம்பல்
அழுத்தமாக எழுதிசென்றது
"பிரிவுகளெல்லாம் நிரந்தரமல்ல " ..

Monday, August 10, 2009

அரேபிய ராசாக்கள் IV


ஈச்சமரமும் ஒட்டகமும்
பாலைவனமும் சுழற்காற்றும்
முழுமுக்காடு பெண்ணும் சாட்டையடியும்
நடமாடும் கனவுகளில்
அவ்வப்போது ஊர்ந்துவரும்
ஊரும் ஊர்நிழலும்
எங்கள் இரவுகளை சுகபடுத்த .


பூ - பெண்


பெண்ணே இப்போதைக்கு
பூக்களுக்கும் எனக்கும்
ஒரேயொரு சந்தேகந்தான்
நீ தோட்டம் சுற்றிபார்க்கிறாயா
இல்லை யாரிந்த புதுபூவென
வண்டுகளோடு சேர்ந்து
தோட்டம் உன்னை சுற்றிபார்க்கிறதா !!


பூக்களின் விருப்பத்திற்கிணங்க
பூக்களை அழகுபடுத்த
பறித்து செல்கிறாயோ !!


பூச்செடி நடக்கிறதென
எல்லோரையும் குழப்புகிறாய்
தயவுசெய்து தோட்டம் பக்கம்
இனி போகவே போகாதே !!


பூக்களுக்கெதற்கு
அழகும் வாசமும்
தந்துகொண்டிருக்கிறாய்
தலையினில் சூடி !!


முகபருக்களை ஆராய்ந்தபின்பு
பூச்செடிகள் ஒன்றுகூடி
காற்றின் துள்ளலில் தலையசைத்து
பூந்தோட்டம் என்றவளை
வர்ணிப்பதாய் நீள்கிறது கனவு !!


பூக்களை பற்றிய
கவிதை கேட்கிறாள்
பூந்தோட்டமே நீயென
அவள் தலைமுடி முதல்
உள்ளங்கால்நகம் வரை
ஓவியம் வரைந்து தருகிறேன் !!

அரேபிய ராணிகள் .


காணகிடைத்த கண்களும்
புறமுதுகு உரசிசெல்லும் மூச்சுகாற்றும்
மௌனமும் கோபமும் இயலாமையும்போல
முழுநீள கருப்புஅங்கிக்குள் உடைபட்டுபோகாது
எழத எத்தனிக்கின்றது
புன்னகையோடு கவிதையொன்று ..

ஏனோ மனம்
வலியாய்தான் காட்சியமைக்கிறது
இப்பெண்கள் பிறப்பை .

Sunday, August 9, 2009

........


கால்கள்நீட்டி கைகள்மடக்கி
படுக்க முயற்சிக்கையில்
தனிமையின் சூடு
கண்களிருட்டின் காட்சிவழி
கொட்டிசிதறும் திரவமாய்
கூடவே அடித்துவிரட்டப்படும்
சிலகோடி உயிர்களும்
சமாதி திசைகாட்டி ..

காதல் கடிதம் ..


அடுக்கிவைக்கபட்டிருக்கும் புத்தகங்களில்
அசைவற்றுகிடக்கும் கவிதையிலொன்றை
திருடியோ திருத்தியோ
மெய்யாகவோ பொய்யாகவோ
அவளை அழகுபடுத்த
சிலநிமிடம் ஒதுக்கிவை ...
வாய்ப்பிருக்கிறது ..
வெட்கத்தில் மௌனபட்டிருக்கும் காதல்
தொபெக்கென உன்
உள்ளங்கையில் அடைபட்டுகொள்ள !!

தீர்ப்புகள் திருத்தப்படலாம் ..


மூக்கொழுக மது விழுங்கி
நடுஇரவின் தொண்டை பாலையில்
வாக்குறுதி நாற்றம் வேகமாய்தட்ட
காதலும் கவிதையும்
வாந்தியில் நெளியும் ..

விடியவிட்டு
விரல்கள்நீட்டி கழுவுகையில்
முதல்சந்திப்பும் மௌனமும்
வெட்கமும் சிறுபுன்னகையும்
முத்தமும் கோபமும்
தரையினூடு காய்ந்தழுது படிந்திருக்கும் ..

ஜாதிகொட்டை
தின்று செரித்த
தாய்பறவை எச்சத்தில்
உயிர்தெழுவோமெனவோ .

கலாச்சாரம் அகல பாதாளத்தில்...


மும்பை வேகவாழ்வினொரு
ஞாயிறு ஒதுக்கி
அழகிய அரபிகடலின்
ஜுஹு கரையோரம் சுற்றலானேன் .,

துப்பட்டா , வெட்கம்
இன்னும் எத்தனையோ
கனம் கூடுதலாம்
வீட்டிலேயே விட்டுவிட்டார்களாம்
சொல்லாமல் சொல்லிபோகிறாள்
பெண்ணொருத்தி !!

எத்தனை முத்தங்கள்
எத்தனை அசிங்கங்கள்
காதலர்களாம் ?!

ஏதோ புத்தகத்தில் படித்து
நம் கலாச்சாரம் கற்கவந்த
வெள்ளைகாரனின் கேள்விக்கு
திக்கிமுக்கி விளக்கிகொண்டிருந்த
பாப்கார்ன் பையனையும்
தேசியமொழிகூட கற்க மறந்த
பாவப்பட்ட இந்த தமிழனையும்
கடந்து செல்கிறாள்
கொஞ்சம் மெதுவாகவே
விலைமகளொருவள் ..

Saturday, August 8, 2009

கவிதையல்ல ...


சாலையோரம் விரிக்கப்பட்ட
பழைய புத்தக கடையில்
சிதறி கிடக்கும்
க(வி)தை புத்தகங்களின்
பிரசத்திபெறா நாயகர்களை
எல்லாவரும் பிரித்து படிக்க
எடையில் எடுத்துசெல்கிறாரோ
மளிகைகடை அண்ணாச்சி ?!

அரேபிய ராசாக்கள் III


அழகற்று போகுமே
ஒற்றையாய் நட்சத்திரம் ..
தனியனாய் வாழும்சாபம்
வாங்கிதான் வந்தோமே ..
கைநிறைய ரியாலும், தெராமும்
கண்கள் நிறைய ஏக்கமும்
திங்க சோறும்
திணிக்கபட்ட புன்னகையுமாய்
நீளுதே வாழ்கை ..
வேரறுந்த வலி
வேறென்ன வழி
வாழ்ந்துதான் ஆகணும்
ஒருமுறைதான் வாழ்க்கை.

பிழைதேடிய கவிதை பிழைகளோடு ..


எவ்விடம் பிழை
அவ்விடம் தேடி
நெடு இரவினில்
நுரையீரல் நிரம்ப
புகையிலை எரித்து
யோசனை கக்கும்
எழுத்துக்கள் பொறுக்கி
காகிதத்தை காயப்படுத்தி
கசக்கி எரிகிறேன் ..

ஜாதி சாக்கடையில்
பிசுபிசுத்துபோன காதலும்
பிழைதேடிய கவிதையும்
குப்பைதொட்டியில் .

.............


வண்ணத்துபூச்சிக்கும்
வானவில்லுக்கும்
வண்ணம் பூசியது யாரென்ற
சிறுபிள்ளை கேள்விபோல்தான் ..

அவள் அறிய முற்படும்
ஏன் என்னை காதலிக்கிறாய் ?!

Thursday, August 6, 2009

ஜூலி I miss you ...





இன்றோடு ஒரு ஆண்டு முழுமையாக நிறைவடைந்துவிட்டது நீ என்னை விட்டு பிரிந்து. அன்றொருநாள் பரஸ்பரம் பரிமாறிகொண்டது நினைவில் வருகிறது.. so...இன்றும் அன்பே என்றுதான் உனக்கான கடிதம் தொடங்குகிறேன்.
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்கு பதிலாய் என்னை யாபகம் இருக்கா என்றே அழுத்தம் திருத்தமாக தொடர்கிறேன். இந்த மாதிரியொரு சூழலுக்கு ஆக்கிவிட்டாயே என்னை?? நாம் ஒன்றாய் கூடிசுற்றிய நாட்களில் என்னை மறந்து விடாதே என்று அடிக்கடி நீ என்னிடம் குறைத்ததன் அர்த்தம் இப்போதான் எனக்கு புரிகிறது. ம்ம்..நீ என்னை பிரிந்தாலும் நான் உன்னை மறக்ககூடாது என்பதுதானோ அது?? மறந்துவிடாதே என்று சொல்லிவிட்டு மறைந்து போய்விட்டாய் எங்கோ நெடுதூரம்.. என்னால்தான் தொலைக்க முடியவில்லை நினைவுகளை. அடிக்கடி என் கனவுகளில் வந்து நீ கொடுத்த முத்தங்களை திருப்பி கேட்கிறாய்.. அய்யயோ எப்படி அதனை திருப்பி கொடுக்கபோகிறேன் என்று நானும் கனவு தொலைந்து பேந்த பேந்த விழிக்கிறேன். தீர்மானித்து விட்டேன் எப்படியும் நீ கொடுத்த முத்தத்தை உன் வகையராவுக்காது கொடுத்துவிடவேண்டுமேன்று. ஓர் அதிகாலை பொழுதினில் உன்னை walking அழைத்து போய்கொண்டிருக்கையில் நான் எதிர்பாராத கணத்தில்
அந்த லாரி வந்து உன்மேல் ஏறி இறங்கிவிட்டது. அன்றைய உந்தன் அலறல் சப்தம் இன்னும் என்காதுகளில் ரணமாக ஒலித்துகொண்டிருக்கிறது. இதற்குமேல் பொறுமை இல்லாதவனாய் விறுவிறுவென சென்றேன் உன் வகையறா நாயொன்றை வாங்குவதற்கு.... இப்படியாக முடித்திருந்த last year டைரியை காலால் பிராண்டி விளையாடிகொண்டிருந்தது என் செல்லகுட்டி ஜூலி... கதை வாசித்துமுடித்த அபினவ் நூலகத்தை விட்டு எழுந்து செல்கிறான் ஏதோவொரு திருப்தியோடு....

ஞாபகங்கள் ...


தூசிதட்டி பிரித்து படிக்கிறேன்
முன்னைவிட கொஞ்சம் அழகாகவே
விடுபட்டுபோன காதல்
பழைய டைரியில் ...

ஓர் அந்நிய இரவு ...


யாருமற்ற என் இரவிற்கு
துணையாய் அழைப்புவிடுத்தேன்
கனவுக்கும் ... காதலுக்கும்

கனவு கைகளை பற்றிகொண்டது
ஓர் உருவமற்ற உயிரோடு ...

அங்கே அவன் அவள்
விரல்களை பிடித்து வருடுகையில்
உயிர்கொண்டெழுகிறது காதல் ...

அவள் அவனது
தலைகோதும் தருணங்கள்
காதலை ஆசிர்வதிக்கிறான் கடவுள் ...

இதென்ன புதுஉணர்தலாய்
அவனும் அவளும்
வெட்கப்படும் காதலில்
கண்ணாமூச்சி ஆடுகிறது காமம் ...

ஏதோவொரு தேடுதல்வேண்டி
இருவரும் தொடங்கினர்
நீண்ட தொலைவு ...

காதல் காபிகடையிலும்
காமம் கடற்கரையிலும்
ரொம்ப அழகாக
தனித்தனியாய் விற்றுகொண்டிருந்தனர்
கலியுகவாதிகள் !!

பயமும் , விரக்தியும் கலந்த
வேரற்ற மனதுடன்
கனவையும் காதலையும்
கலைத்து நடுசாமம்
நித்திரை முறித்தேன் .!.

Wednesday, August 5, 2009

என்வீடு வந்து போனாய்...


என்னைதவிர யாரையும் அமரவிடுவதில்லை
செல்ல சண்டையிடுகின்றன
நீ அமர்ந்துபோன இருக்கைகள் !


என் வீட்டு தேனிர்குவளை
வேறெதுவும் பருக மறுக்கிறது
உன் உதடுகளை சுவைத்ததிலிருந்து !


குளியலறை கண்ணாடிக்கு
காய்ச்சல் வந்துவிட்டது
ஓ... நீ முகம்கழுவினாயோ !


அழகுதிமிர் சிதைந்து
வெட்கத்தில் தலைகுனிகிற
மொட்டைமாடி ரோஜாக்கள் !


நீ மறக்காமல் மறந்துபோன
கைக்குட்டை...பத்திரமாக
உடுத்திக்கொண்டது
என் காதல்குழந்தை !


டேய் என்னடா
யார்ருடா அந்த பொண்ணு
தங்கையின் சீண்டல்
அறிந்து கொண்டேன்
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு !


இந்நிலை நாட்கள்
உனது நிழல்களை
உற்று பார்
அச்சப்படாதே
அது நான்... நானேதான் !


வெளிவர அடம்பிடிக்கின்றன
கவிதைகளெல்லாம்
காதல் குளத்தில்
முங்கிகொண்டு !!

பிரிவின் வலி..


அழியாத ஞாபகங்கள்
கிறுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன
நீயற்ற வெற்றுபொழுதனில்
கவிதைகளாக ...

பிரிந்துபோன மனைவிக்கு ... கடிதம்


நீயில்லையென தெரிந்துகொண்ட
பக்கத்துவீட்டு குழந்தைகள்
வீட்டுக்கு விளையாடவருவதில்லை
சுடுகாடு பக்கம்போனா
அம்மா அடிப்பாங்களாம் !!

நீயற்ற திமிரில்
இந்த மழைநின்ற வானம்
மொத்த ஈரத்தையும்
என்னிடம் கொட்டிசெல்கிறது !!

உச்சக்கட்ட வன்முறையில்
உதடுகள் இங்கே
எப்போதோ நீ சிந்திய
புன்னகையை தேடி
காற்றோடு !!

இல்லை என்பது
உனக்கு நான்மட்டுந்தான்
எனக்கு இந்த உலகமே ...

உனக்காக ஜனிக்கபட்ட
உயிரின் காதலைமட்டும்
எங்கு எடுத்துசெல்கிறாய் ??

முகவரி தொலைத்த
இந்த உயிர்க்கு
முதல்வரி கொடு ...

புரிந்து கொள்
பிரிதலின்றி காதலில்லை
வா..................காதலிக்கலாம் .,

Tuesday, August 4, 2009

சொல்லாத காதல் ...


உன்மீதான காதல்
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் ..

காதல்கவிதை ..


ஏதோவொருவிதத்தில்
எல்லா கவிதைகளும்
ஞாபகபடுத்துகின்றன
உன்னையே..................
நானும்
கவிதையெழுத
கற்றுகொண்டேன் !!!

Monday, August 3, 2009

யாரிடம்போய் சொல்ல ?


பூங்கா இருக்கையில்
நமது பெயர்கள் மேல்
நமது பெயர்கள் எழுதி
உஷ்ணமேத்தலாம் ...
பிழையொன்றும் இல்லை
பரிமாறி கொள்ளலாம்
சில சம்பிரதாய சில்மிஷங்களை ..
மழை மாலையில்
காதலினூடே காமமும் கலந்திருக்கலாம் ...
ஓர் நன்னாளில்
திருமண வாழ்த்துக்கள் பெறலாம் ...
விண்ணளவு காதலும்
நிலவளவு காமமும் வைத்து
நட்சத்திர பிள்ளைகள் செய்து
நூறாண்டுகள் வாழலாம் ..............................


கனவுகளுக்கொன்றும் குறைவில்லை
காதலியைத்தான் காணவில்லை ...

அவள் - கவிதை ...


தேவதைகளெல்லாம் கோபமாக
உன் வீடுநோக்கி போகின்றன
என்னவென்றா கேட்கிறாய்
எல்லாம் பொறாமைதான்
செய்து பின் உயிர்கொடுத்தானோ
உன் அப்பன் உன்னை !!

என்னருகில் வா
நானும் கொஞ்சம் அழகாகிகொள்கிறேன் !!

நனைந்தது போதும்
குடை பிடித்துகொள்
மழை வெட்கபடுகிறது பார் !!

இத்தனை பாவனைகளை
எங்கிருந்து பிடிக்கிறாய்
எனக்கும் ரகசியம் சொல்லிகொடேன் !!

வரும்போதே
கொஞ்சம் மௌனத்தையும்
நிறைய வெட்கத்தையும்
எடுத்து வந்துவிடுவாயோ !!

சற்றுநேரம் அப்படியே இரு
கவிதை எழுதி கொள்கிறேன் ... !!

மனைவியே காதலியாவாள்...


அதிகாலை பூக்கள்
பனித்துளி ரசிக்க
கைப்பிடித்து நடப்போம்..

வீதிகளில்
குழந்தைகள் கண்டால்
குழந்தைகள் ஆவோம்..

ஓர் நொடிக்கும்
உயிர் கொடுப்போம்

குட்டி குட்டி புன்னகைகளையும்
சேமித்து வைப்போம்..

சின்ன சின்ன பரிசுகளையும்
அலங்கரித்து வைப்போம்..

உலகையே வாங்கிவிட்டதாய்
கர்வம் கொள்வோம்..

பெண்மை பேச நானும்
ஆண்மை பேச நீயும்
செல்ல சண்டைகளிடுவோம்..

மெத்தை வெட்கப்படும் தருணம்
நாம் கசிந்து போவோம்..

வெளிச்சத்தை இருள் கொல்லும்
தேடல்கள் தொடர்ந்து செல்லும்..

எந்தன் கனவுகள் நிறைக்க
எப்போது வருவாயோ ?!

Sunday, August 2, 2009

காதலொரு சாத்தான் கவிதை !!


கக்கயிடுக்கிலும்
உள்நாக்கு எச்சிலிலும்
சம்மணமிட்டுகொண்டு காதல்
பிரிவிற்கான காரணமறிய உந்தினால்
புள்ளியோ .. பூலோகமோ
அகப்படலாம் ...

எழுதி அழுதாலும்
அழுது எழுதினாலும்
கடைசியாய் சிக்கபோவது
கிழிக்கப்பட்ட கடிதங்களும்
செத்துப்போன முத்தங்களும்
பிடிசாம்பலுந்தான் ..

கக்கத்து மயிர்வழித்து
தேங்கிய எச்சிலில்நனைத்து
சாக்கடையில் முக்கினால்
காரணமறிய முயலும் அவகாசம்
கபகபவென எரியும் ;
எரிய நேரம்பிடித்தால்
கைகுட்டையை போடு
மூக்குசளியும் கண்ணீரும்
உதவி கொள்ளும் ..

ஒன்று கூட்டல் ஒன்று இரண்டு
அ ஆ அப்புறம் இ , ஈ .........
இதுபோதாதா வாழ ??


பிசிரடிக்குது பிராந்தியில் பால்யம் ...!


அம்மாவின் அடுப்பங்கரை எள்ளுடப்பியில்
ஒளிந்திருந்த ஐந்துரூபாய் திருடி
நண்பர்களோடு சுவைத்த மிட்டாயால்
உதைவாங்கி கிடைத்த சந்தோஷம்
கிடைக்கபோவதில்லை ஒருபோதும்
மிச்சம்பிடித்த சம்பளத்தில்
வாங்கிகுடிக்கும் பிராந்தியில் ...

சிங்களனுக்கு பிரபாவிடமிருந்து மூர்க்கமாயொரு ...

விந்தணுக்களும் குண்டுதுகள்களும்
ஒருபோதும் தீரபோவதில்லை
விதியேயென்று வாழ்வதாயுமில்லை ..

புத்தனுக்கும் பேய்பிடிக்கும்
சாமிகளும் ஆயுதமேந்தும் ..

இதுவொன்றும்
தனிமனித உந்தலில்லை
ஒடுக்கியவுடன் ஒடிந்துவிட
இனம் அழிந்துவிடும்
இனியும் கனவு காணாதே ..

ஏந்தப்படும் துப்பாக்கிகள்
என்ஆத்மா தலைதாங்கும்
தனிஈழத்தை தனதாக்கும் ..

நம்பிள்ளைகள் கைகோர்த்து
இனம் மொழி
குண்டடி கற்பழிப்பு
பட்டிணி சாவு
வரலாற்றிலறிந்து
வெட்கப்படும் கண்ணீர்சிந்தும்
முன்னோர்களை தியானிக்கும் ..

இவையெல்லாம் நிச்சயமாய் நிச்சயிக்கும்
கொஞ்சம் காலம் பிடிக்கும் .