Sunday, August 25, 2013

பெருந்தீபம்




மார் கசியவேண்டும் என்பதற்காகவே
என்னை அடிக்கடி அழச் செய்பவள்
அவள்;
கேட்டால்
விளையாட்டுக்கு என்பாள்

இக்கணம்
அவளுக்கு மிகவும் பிடித்த
என் முத்தத்தை வழங்குகிறேன்
அவள்
சிரிக்கவேண்டும் என்பதற்காக
வழக்கத்தை மீறி

மேலும்
ஜீவநதியிலிருந்து
எங்கேயும் போகவில்லை
நாங்கள் 

No comments: