Monday, August 5, 2013

கேலிச்சித்திரம்



கரகரத்தக் குரலொன்று
இருளில் தனியாய் கரைந்துகொண்டிருக்க

இன்னும் இன்னும்
தத்ரூபமாக நடித்துக்காட்டுவதற்கு துரிதப்படுகிறாய்
ஏகப்பட்டக் கைத்தட்டல்களோடு
நீ

ஒரு கேலிச்சித்திரத்தின் கதாநாயகனென
வாதைச்சிறகின்
நெருப்புக்கண்கள்
உன்னை வரைந்துப் பார்க்கிறது 


No comments: