Monday, August 5, 2013

சுகானுபவம்



மேலும்
நீர் வற்றியக் கூடத்தில்
தலைதூக்கி
செருமிக் கொள்ளும்
முதலைகளுக்கு
குரூரக் கண்கள்

கொலைக்குற்றவாளியின்
கைவிலங்கினையொத்து
மின்தகனமேடையின் பொத்தான் அழுத்துபவன்
தன் இருப்பை சரிபார்த்துக்கொண்டிருக்கிறான்

ஆனாலும்

கொடிமரத்துக்கொண்டையில் அமர்ந்திருக்கும்
காகம்
திருவிழா கருடபார்வைக்கு

இப்பொழுது நீங்களெல்லாம் போகலாம்
துயர்ச்சரீதம் எனக்குரியது  

மார்ச்சுவரி காப்பாளனின்

பீடி புகையிலிருந்து எட்டிப்பார்க்கிறது
தற்கொலையூண்டவளின் இருமல் ஒலி 

No comments: