Sunday, August 25, 2013

காத்திருப்பு



உப்பிய வயிறு
மெல்ல மெல்லக் கோதும்
விரல்நுனி அள்ளி
பிரார்த்திக்கும் ஒலியிடம்
கண் அமர்கிறான் சற்றைக்கு

வனைந்த மச்சத்தில்
அவ்வளவு விசும்பல்களுக்குப் பிறகு
எழும்பி பறக்கிறது
தலைமுறை

எல்லாம் இனியவை ஆகுக  

No comments: