Sunday, August 25, 2013

அவ்வளவே



பேருவுவகையுடன்
காற்றில் தனித்த இலையாக
மிதந்தலைந்துகொண்டிருந்தேன்

இளைப்பாறுஎன
கரம்பற்றி அழைத்துச் செல்கிறது
குளிர்நதி

மறுப்பேதும் அறிவிக்காமல்
ப்ரியத்தின் தீவிரம் பொருட்டு
இசைக்கத்துவங்கினேன்
பிரித்யேகப்பாடலொன்றை

நிம்மதிக்காற்றுடன்
ஆசுவாசமாக என் தோளயர்கிறது
நதியின் கண்கள்

No comments: