Monday, July 30, 2012

இருந்திருந்தும்




யாதொரு பார்வைக்கும்
அது  
ரோஜா இதழாக இல்லாமல் போவதை
அறிந்திருந்தும்

தேவதையின் சாத்தான் நிரம்ப விளம்பும்
ஆசிர்வாதம் பெற்றவன் நானென்பதில்
மிகுகர்வம் கொண்டு உக்கிரத்தாண்டம் பூண்டு
வியாபிக்கும் நமது காதலின்
நகக்கண் உபயோகித்து
ஒரு மெல்லிய ரோஜா இதழை
வரைந்து பார்க்கிறோம்

ஆலயத்து வௌவாலின் கூக்குரலோடு
நம்மை உண்ணக் காத்திருக்கிறது
பாசிப்படர்ந்ததொரு பெரும் பாறை

நன்றி உயிரோசை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

(உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்.)

நன்றி.