Monday, July 30, 2012

வர்ணங்கள் பூசப்பட்டிருக்கும் பாவனை






கவிதைக்குள் அழைத்துப் போகிறாய்
அல்லது
அழைப்பதுபோல் பாவனை செய்கிறாய்

நீ பூசியிருக்கும் 
உன் மனைவிக்கும் மகனுக்குமான
வேதனைக்கும் அன்பிற்கும் நடுவில்
எட்டிப்பார்க்கும் என்னை

சொற்ப நொடிகளில் வெளியேற்றுகிறாய்

பின் 
மிகுசிரத்தையோடு ஒரு துரோகத்தை அழிக்க
மெனெக்கெடுகிறாய்

இன்னும் நான் முழுமையாக உள்ளிருந்து
புறப்படவில்லை என்பது
வாய்ப்பில்லைதான் நீ அறிந்திருக்க

நன்றி உயிரோசை


No comments: