Thursday, July 12, 2012

எனக்கு மனப்பிறழ்வைக் கொடு இறைவா



பேரன்பின் அனார்
நானொன்றும் அவ்வளவு துரோகவாதியல்ல
யாசிகா மாதிரி

குழந்தைகளைப்போலக் கடவுளாக அல்லாது
வறுமையைப்போலக் குரூரச் சாத்தானாக
இன்னும் இருந்து இருப்பேனோ
இடையுண்ட நான்?

தற்கொலை செய்தவளுக்கு
இன்று மட்டுமே ஆறேழு முறை
அதே கனவு
திரும்பத் திரும்ப வந்துவிட்டதாம்

நன்றி உயிரோசை



No comments: