Sunday, July 29, 2012

துயரத்தைக் கொண்டாடுதல்



யாருமற்ற தனித்த தீவில்
நிறைந்த இருப்பாய்
நீந்தப் பழகுதலின்
உனது ரகசியக் குறிப்பொன்றை
இறுதியில் களவாடுகிறேன்

சற்றே துயரத்துடன்
மனமீன்கள் கொத்தி உண்ணும்
என் அந்தரங்கப் பரிபாசையை 

கடல் மேல் துள்ளும்
இம்மழைத் துளிகள் தான்
எவ்வளவு அழகு

நன்றி உயிரோசை

No comments: