Saturday, July 25, 2009

"வாயிருந்தால்" வெடிகுண்டு ?!

பச்சை குழந்தைகளும்
பாவாடை பெட்டைகளும்
கணவன்மார்களும்
கைதடி கிழவன் கிழவிகளும்
ஆடு மாடு கோழிகளும்
கருகி சாகின்றனவே
ஒருவேளை எனை கொணர்ந்தவன்
கண்களற்ற குருடனோ ???

பாதங்கள் தொட்டாலே
உரைத்து சொல்வேன்
யாருமற்ற தனிமை வேண்டுமென்று
வடித்து கொடுத்தவன்
கால்களில்லா நொண்டியோ ???

அனிச்சையாய் அமைதிகாத்து
அடங்கி போயிருப்பேன் !!!
உண்டாக்கியவன் என்னிடம் கேட்க
மறந்து தொலைத்தானே
காதுகள் தைத்துவிட
ஒருவேளை செவிடனுமோ ???

கொலை சிரிப்புடன்
என் கோழை சப்தத்தையும்
வெற்று வெளிச்சத்தையும்
தூரநின்று கண்டுகளிக்கிறானே ...

மனசாட்சியை
பிணங்களுக்கு விற்றுவிட்டானோ
என்போல் எரிந்து போகட்டுமென்று ??!

No comments: