Friday, July 24, 2009

நிர்பந்திக்கபட்டவைகளே...இழப்புகளும்.


பூக்கள் பறித்துவருகிறேனென்று
பாலை மணல்திசையில்
நகர்ந்துகொண்டிருந்த மனம்
கிழவனொருவன் வழியில் ஒற்றையாய்
கைத்தடியின் பாக்கியத்தோடு
சிறகுகள் விற்பனை செய்ய
அலைந்து கொண்டிருப்பதை கண்டு
சில நிமிடங்கள் நினைவு கூர்ந்தன...
ஞாபகம் தொலைய மறந்ததாய்
வெறுமை முற்றிலும்
கிழவனின் கைகளில் திணித்துவிட்டு
சிறகுகள் பற்றியவாறு
பட்டாம்பூச்சியின் வண்ணத்தை
லேசாய் ஒட்டிக்கொண்டு திரும்பின
செத்துபோன அம்மாவின்
முலைகளுக்கு காத்திருக்கும்
பிஞ்சு மழலையின் கன்னம் தடவ.

No comments: