Friday, July 24, 2009

வாழு.. வாழபழகு ... காதலோடு..,


என்ன சொல்லி சமாதானப்படுத்த
மீண்டும் மீண்டும்
உனது பெயரை மட்டுமே
எழுதி எழுதி பார்க்கும்
எனது காதலை...
அதிகாலை பூக்களின் புன்னகையுடன்
என் கைப்பிடித்து கேட்கின்றது பேனா
எவ்வளவு அழகு அவள் ?!
நேற்று என்னை பிரியும்பொழுதினில்
நினைத்துகொண்டேயிரு என்று
நீயளித்த முத்தங்களை காண்பித்தேன்
வெட்கபட்டுகொண்டு
மறுபடியும் காகிதங்களை
நனைக்க ஆயுத்தமாகி
சொல்லாமல் சொல்லிபோனது
வாழு.. வாழபழகு ... காதலோடு..,

No comments: