Sunday, July 26, 2009

கனவாய் கலையாமல் நிகழனும் ...


கண்ணீர் வடிக்கின்றன
மனித புற்றுகளும்
மாட்டு கொட்டகைகளும்
அனாதை ஆகிபோனதெண்ணி ...

பிணவாடையில் வாழவிருப்பமின்றி
மக்கி அழுகின்றன
தேயிலை தோட்டங்கள் ...

நாலாபுற அலைகளும்
நுரைகளில் தூக்குபோடுகின்றன
ரசிகனற்ற ஆதங்கத்தில் ....

கடலின் வழிவரும்
கப்பல் பிடித்து தப்பியோடலாம்
புத்தன் மீண்டும் உயிர்தெழுகிறான் ...

குண்டு சப்தம் நின்றுபோகட்டும்
அகதிகள் ,, கற்பழிப்பு
அகராதியிலிருந்தே அழிந்து போகட்டும்
சிறார்கள் பேடியற்று பள்ளிசெல்லட்டும்
புத்தர் மௌனமாய் தவம்செய்யட்டும்
காதலர்கள் கடற்கரை ரசிக்கட்டும்
தேயிலை வாசம் வீசட்டும்
இயற்கை பீற்றிகொள்ளட்டும்
இலங்கையின் அழகை ....

நேற்று வெடித்த குண்டில்
செத்துபோன சாமி
வரம் .. கொடுத்து போகிறான்
ஏழாம் ஜென்மத்திலாவது
கிடைக்கட்டும் இவையெல்லாம் !!!


No comments: