Wednesday, July 29, 2009

கனவற்ற இரவு...

என் தோட்டத்து
பூக்களுக்கெல்லாம்
கண்கள் முளைத்து அழுகின்றன
விட்டுப்போகிறேன் என்கிறாயே!

விழிகள் திறக்க மறுக்கின்றன
உன் வருகையில்லா
வீதியை வெறுப்பதனால்!

சுண்டல் பையன்
தொழில் மாறுகிறான்
கடற்கரை மையானமாகிறதாம்!

இரவுகள் அடம்பிடிக்கின்றன
உன் புன்னகை நிரம்பிய
கனவு வேண்டுமென்று!

வார்த்தைகள் சிதைகின்றன
காதல் இல்லாத
காதல் கவிதை வாடி!

கால பகவான்
செத்து போகிறான்
வாழ பிடிக்காமல்!

கடவுள்
சாபமிடுகிறான்
காதல் செத்தொழிய!

வெறுக்கிறது
எனை இந்த
புது எழுத்துலகம்..

நட்சத்திரங்களில்லா இரவு
அலைகளில்லா கடல்
காண ரசிக்குமோ ??

No comments: