Monday, July 27, 2009

"காதல்... காதல்...காதல்"

அதிகாலை கனவில்
ரோஜாவே வந்து கெஞ்சுகிறது
உனக்கு தரசொல்லி!


விண்மீன்கள்
விலையற்றுபோனதாம் உன் விழிகள்
பிரசவித்தபின்பு!


வியர்வைகூட இனிக்கிறதாம்
உன்னை காண
காத்திருக்கும் நேரங்களில்!


பிசாசுகளும்
நல்லது செய்ய தொடங்கிவிட்டனவாம்
உனது புனகையை கண்டபின்னால்!


மண்ணிடம் நட்பாகிவிடேன்
உன் பாதங்கள்
அணைப்பதால்!


நீண்ட தியானமிருக்கிறேன்
உன் முகம் மட்டும்
நடுவில் அடிக்கடி!


எனக்கும் உனக்கும்
சின்ன விதியாசந்தான்
உன்னை காதல் தேடுகிறது
காதலை நான் தேடுகிறேன்!


நட்புக்கும் - காதலுக்கும்
நடுவில் நிற்பது
நானா இல்லை நீயா?!


உறங்கப்போன நேரத்தில்
இதயம் ஞாபகபடுத்துகிறது
ஆக்சிஜன் உனது பெயரில்
மட்டுந்தான் கிடைக்குமென்று!


கனவுகளை
உயிர்ப்பிக்குமோ
காதல் காற்று வழங்கி!


காதலுக்கும்
காதலிக்க தோணுமோ
நம்மை பார்த்து ?!

No comments: