Saturday, May 18, 2013

நிலவுக்குத் தெரியும் தன் ஓவியம்




சாத்தான்கள் 
பூ பறிக்கும் வனாந்தரத்தில் 
கனி தேடுகிறான் கடவுள் 

அப்பொழுது நுழைகிறது
பாம்பு;
அமைதியாக 
மந்திரங்கள் சொல்லியபடி.

சுண்டில் தீ பரவ முத்தமிடும்
இருவர்
நாங்கள்

சாத்தான்கள் அனைவரும்
ஓங்கி அறைந்த ஒற்றை அடியில்
தத்தம்
கூட்டில்
ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இரவு உறங்கியது
வெள்ளை வெளிச்சத்துடன்

ஆமென்  

No comments: