Thursday, May 23, 2013

நிரூபணங்களின் ஆதி மழை




பெரிதாக ஒன்றும் செய்யவில்லை நான் 
ஆண்டாண்டு காலமாக நீங்கள் 
கவனித்துக்கொண்டிருக்கும் ரோஜா செடியிலிருந்து 
ஒற்றைச் சிகப்பு ரோஜாவைப்பறித்து அவளிடம் நீட்டினேன். 

மௌன மழையை அசரடித்துவிட்டுத் தலையேறிக்கொண்டது
அச்சிகப்பு ரோஜா.

இக்கணம் நாங்கள் இருவரும் உயிரோடில்லை
என்பதை மட்டும்
தம்பி செழியா  
நீ ரகசியமாக வைத்துக்கொள்



No comments: