Wednesday, May 8, 2013

ஆராதனா எனும் பேய் 46




ஜன்னலுக்கு உள்ளே நீ இருக்கிறாய்
ஜன்னலுக்கு வெளியே என் நீ இருக்கிறாய்
மழை உள்ளேயும் வெளியேயும் ஆடுகிறது
தன் ஆட்டத்தை

திசை தெரியா பறவை
ஈரத்தின் ஓங்கிய வீச்சில்
தன்னைத் தொலைக்கிறது
அல்லது
தன்னை பிறக்கிறது

இங்கு நன் சொல்ல வருவது
பிறத்தல் பற்றி மட்டுமே

ஆமென்

No comments: