Thursday, May 23, 2013

கருணை




ATM வாசலில் நின்றபடி 
பிச்சையெடுப்பவர்களின் கனவில் 
வர விருப்பம்.

பஸ்-ஸ்டாப் தோறும் 
ரயிலடி தோறும் 
முதிர்ந்த தாடி அழுக்கு உடையுடன் 
அலையும்
தலைக்கு ஸ்வாதினம் இல்லாதவர்களை
அழைக்கிறேன் எனது கனவில்..

பிறகு 
நான் தொல்லையுறும்
மனது 
சிறிது நம்பிக்கைப் பெறும்

இக்கணம் 
என் கண்முன்னால் 
வண்ணத்துப்பூச்சியொன்று
பறக்கிறது...

வேண்டுமா உனக்கு?

ஆமெனில் 
புன்னகையை என்
தோள்மீது சார்த்திச்
செல்;       

No comments: