Saturday, February 16, 2013

பிம்பங்கள்




நீ
கத்தி கத்தி விரட்டும்
உனது புலிவேஷத்தில் செத்த மீனின் வாடை

நான் இட மறுதலிக்கும்
உனது முகமூடியின்
கால்களிலுள்ள
முட்களை வலிக்காமல் எடுக்க வேண்டும்

சொற்ப ஞாய யதார்த்தத்திற்கு..

உனக்காகவே
எனதிந்த அறையினை இருள்
பரப்பி வைத்திருக்கிறேன்

ஆமென்.


No comments: