Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 37



வம்படியாக
ரயில் காமித்துத் தருவதாக
கூட்டிப்போன அப்பாவிடம்
ரயில் வாங்கித் தரச்சொல்லிக்  குறுகுறுப்பூட்டிய
நினைவென

புதியதாய் அருவிக்குத்
தலை காமித்த சிறுமியின் மனமென

நண்பன் சுபாஸ்உடன்
விலாங்குமீன் பிடித்துப் பொறித்து ருசித்த நள்ளிரவென

இன்னும் இன்னும் சில அந்தரங்கங்களையும்..

இப்படி இப்படி எது ஏதோ ஞாபகத்தில் துள்ளுகிறது
எனக்கு

ஒரு நீண்ட உரையாடலின் முடிவில்
"என்னை இழந்தால் நாடுஇழந்த மகாராணியாம் அவள்"
என்று சன்னமான குரலில் புன்னகைத்துவிட்டு

மார் நிறைய முத்த காய்ச்சலோடு
செல்கிறாள் ஆராதனா


No comments: