Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 35




எனது ஞாபகங்கள் அனைத்தும்
மரித்துப் போகுமொரு
இல்லாத உன் நாளில்
என்னை அணைத்துப் பிடித்து அழுகிறாய்
எல்லாம் எல்லாம் எல்லாமும் அதிர

ஒரு சிறிய புன்னகையில் வாழும்
நம் பெருங்காடு
மீட்டும் நிற்காத அசைவில்

எந்தச் சலனமுமின்றி
பேசுகிறது
அடையாத மௌனம்

ஒளி படர்ந்தக் கணம்
நீ
சடலங்களாகிறாய்


No comments: