Sunday, February 3, 2013

ராஜா ராணியால் நிரம்பி வழியும் அரண்மனை




அன்பைக் கொடுத்து
வலியைப் பழக்குகின்றார்களாம்
காலங்காலமாக
அந்த மிகப்புராதனமான அரண்மனையில்

எல்லோரும் தப்பித்தோடிய
ஒரு வரலாற்று நாளில்தான்
அங்கு சென்று சேர்ந்தோம்
அளவில்லாப் பிரயாசத்துடன்
நாம் நமக்கான வாழ்வினை சிருஷ்டிக்க
எல்லாம் அறிந்திருந்தும்

நம் நாட்களில் அன்பு நதியெனப் பாய்கிறது

திகட்டவே திகட்டாதது எனும் கர்வத்துடன்
பருகிக்கொண்டிருக்கிறாய்
ஒற்றை ராணியாகிய நீ

போர்க்களத்தின் செந்நிற நிலமென
வலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்
உனக்கு ராஜாவாகிய நான்

ஆனந்தம் பேரானந்தம்...

No comments: