Friday, May 18, 2012

இருப்பின் இன்மை!







உனது இருப்பை
உறுதிப்படுத்தும் செய்கையென
புறந்தள்ளப்படும் இச்சொற்கள் யாவும்
அன்பை பரிசீலப்பதாகவே..

யாவற்றிற்குமென நீ பிடித்திருக்கும் 
மௌன துர்தேவதையை
எனது உயிர்த்தாவரத்திற்கு
உண்ணக்கொடு

எரியும் வனம் அணைய

உதடுகளைப் புணரலாம்
வந்துவிடு,

இல்லை இன்னும்
அதிக அவகாசமொன்றும் நம்மிடம்




நன்றி மலைகள்.காம்

No comments: