Thursday, May 10, 2012

ஆராதனா எனும் பேய் 12




நேற்றிரவு சரியாக 2.15 மணி இருக்கும்
ஞாபகம் இருக்கிறதா?
உன்னைக் கொலை செய்திருந்தேன்

குருதி வழிந்த உன் யோனியின்
நறுமணத்தில் மெய்மறந்து அயர்ந்திருப்பேன்
இதனை அவர்கள் மொழி பெயர்க்கும் தருணம்

நீ இங்கே வா
உனது தலை மயிர்க்கற்றைக்குள்
விரல்கள் மொத்தம் விரித்து
புது இசை பரப்ப வேண்டும்

நீ இங்கே வா
உனது கண்களிலும் காதோரங்களிலும்
மென்முத்தம் பதிய வேண்டும்

நீ இங்கே வா
உனது சிறு முலைகளை
உதடுகள் உப்பிக் கடித்துண்ண வேண்டும்

நீ இங்கே வா
உனது தொப்புளில்
முகம் சரிபார்க்க வேண்டும்

நீ இங்கே வா
உன்னை இன்னொரு முறை
கொல்ல வேண்டும்
அல்லது
புணர வேண்டும்

நீ இங்கே வா
உனது கால்களின் பெருவிரலை
வாஞ்சையுடன் நாய் நக்குவதைப்போல
நக்கி நக்கிச் சாகவேண்டும்

எங்கு தேடியும் இல்லை நீ
நீ இங்கே வா

No comments: