Wednesday, December 19, 2012

பனிக்காலத்துக் குறிப்புகள் 3




ஆகாயத்தில் பறப்பதற்கென
திறப்பித்தேன் என்னை

நீ வந்தாய்
புன்னகையெனும் களவு நளினத்தோடு

இப்பொழுது
இருவரும் நடந்து கொண்டிருக்கிறோம்

பிறந்த குழந்தையை முத்தமிடுவதென
தீபத்திலான திரி நுனுயினை
வருடிக் கொடுத்தபடி

வாய் விட்டுச் சிரித்தபடி

காலத்தை நெஞ்சிலேற்றிப் பாடியபடி

No comments: