Sunday, December 9, 2012

பனிக்காலத்துக் குறிப்புகள் 1



அலமாரியின் நடு இடுக்கில் 
பளிச்சென 
எப்பொழுதும் நீ பொக்கிஷமாக வைத்திருக்கும்
அப்பச்சைநிறப் பட்டுப்புடவையை
கொஞ்சம் எடு பெண்ணே

உள்ளே நான் பொதிந்து வைத்திருக்கும் கடிதத்துடன்
உனக்குப் பிரியமான ரோஜாவின்
இதழ் ஒன்றும் அலைபாயும் (ராஸ்கல், கள்ளா...)

ம்; கண்ணீரோ புன்னகையோ
உன் விருப்பநிழல் போதுமடி பெண்ணே
.
ஒரு நம்பும்படியான பொய்யை
இவ்வளவு ஆச்சர்யத்துடன்
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களெனில்

வைத்துக்கொள்ளுங்கள்
இது
3075-ஆம் ஆண்டு என் மனைவியுடன்
எடுத்துக்கொண்ட புன்னகைத் ததும்பும் சித்திரம்






No comments: