Saturday, December 22, 2012

ஆராதனா எனும் பேய் 26


*
தத்தெடுத்தல் 

நீண்ட பேய்மழை ஒன்றின் 
கனத்தக் கால்கள் தலை முட்டித் தொட்டக் கணம் 
நீ ஆடை கலைத்த முத்தங்கள் 
சொல்லிச் சொல்லி ஆர்ப்பரிக்கிறது

நம் இருவருக்குமானதொரு 
தீவு ஒத்த உலகினை
இசைத்திருக்கிறோமென

எந்நாளும்
எந்நாளும் 


No comments: