கிழக்கின் திசையிலிருந்து எழும்பிய பறவை
வானை அளக்கமுடியாதபடி
அதற்கும் அப்பால் அதற்கும் அப்பால் என..
தெய்வத்தின் கருணை
துயரத்திற்கு
தன்னை மூடிக்கொண்டிருப்பது
சுகம்.
கவனித்தீர்களா?
அவ்வளவு வேலைப்பாடுடைய அரங்கத்தில்
சிறியதாய் மிகச் சிறியதாய்
வந்து நிற்கிறது
மரணம்
No comments:
Post a Comment