Saturday, September 28, 2013

குழந்தை தானாகவே முத்தம் கொடுக்கிறது





கிழக்கின் திசையிலிருந்து எழும்பிய பறவை
வானை அளக்கமுடியாதபடி
அதற்கும் அப்பால் அதற்கும் அப்பால் என..

தெய்வத்தின் கருணை
துயரத்திற்கு
தன்னை மூடிக்கொண்டிருப்பது  
சுகம்.

கவனித்தீர்களா?
அவ்வளவு வேலைப்பாடுடைய அரங்கத்தில்
சிறியதாய் மிகச் சிறியதாய்
வந்து நிற்கிறது
மரணம்

No comments: