புல்லாங்குழல் வேண்டுமே வேண்டுமாம்
மகள் உதயமொழி
அழுகிறாள்
உன் மூன்று நாள் உதிரம்
வெயில்மீதேறி மிதக்கும் என் துடிப்பு,
வலிக்கிறது வலிக்கிறது வலிக்கிறது...
இது மழை இரவு
இது கோடை பகல்
இது பிழை
இது வன்மம்
“ நான் ஏன் நீயாகப் பிறக்கவில்லை “
நெஞ்சடைத்துச் சாகிறான்
இதயத்தை வரைந்து காட்டுபவன்
புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.
உதயமொழி சிரிக்கிறாள் பார்
என் உதிரமே!
No comments:
Post a Comment