Saturday, September 28, 2013

அறம்




அடுப்படிக்குள் ஒழிந்துகொண்டிருக்கும்
பூனைக்கு இருக்கும் இதயம்
யாருக்கு கவலை? என்ற கவிதையில்
ஆயிரத்தெட்டுப் பிழை இருந்தபோதும்
கண்ணீர் சொட்டும் என்னை
ஏன் வெறுக்க வேண்டும்
என்ற கேள்வி
நீ கேட்கிறாய்.

நல்லது..

மேலும்,
ஒரு நதியின் உடலில்
ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்?

புன்னகையா பதில்
அல்லது
கண்ணீரா பதில்

அறம்.

No comments: