Sunday, July 14, 2013

கிறுக்கல் வரி



சாத்தான் ருசித்த பைத்தியக்காரியின் முலைகளில்
முட்டாள் கவிஞனின் வாடை என்கிறது ஒரு வரி

சாத்தான் புணர்ந்து கைவிடப்பட்டப் பிறகே
பைத்தியக்காரி;
பைத்தியக்காரியின் முலைகளில்
புத்திசாலிக் கவிஞனின் வாடை என்கிறது மற்றொரு வரி

இரண்டும் இல்லை
புணரும் முன்பு
சாத்தான் கடவுளாகத்தானிருந்தான் என்கிறது
இன்னும் ஒரு கிறுக்கல் வரி

No comments: